Monday, July 20, 2020

கண்ணீர் அஞ்சலி - விழுப்புரம் கம்பன் கழகச்செயலர் மு.க.சங்கரன் இயற்கை எய்தினார்

கண்ணீர் அஞ்சலி

விழுப்புரத்தில் கம்பன் கழகத்தின் வாயிலாக கம்பன்விழாவைச் 
சீரோடும் சிறப்போடும் நடத்தி வந்த அதன் செயலர் கவிஞர், பேச்சாளர், நகைச்சுவை நாவலர்   மு.க.சங்கரன் அவர்கள் 
இன்று (20.07.2020) இயற்கை எய்தினார் என்ற செய்தி
 மிகு வருத்தத்தை அளிக்கின்றது.

    கம்பன் புகழ்பாடிக் கன்னித்தமிழ் வளர்த்த அவரின் பணி என்றும் நினைதற்கு உரியது.  அரசியல் தலைவர்கள், இலக்கியவாணர்கள், ஆதீனகர்த்தர்கள் போன்றோரை அழைத்து அவர் கம்பன் விழாக்களை நடத்திய பாங்கு நினைத்தற்கு உரியது. 
     அன்னாரின் ஆன்மா அமைதி பெற இறைவனை இறைஞ்சுகிறோம். அவரின் குடும்பத்தாருக்கு எங்களின் ஆறுதலைக் காணிக்கையாக்குகிறோம்
கம்பன் கழகத்தார்
 காரைக்குடி

No comments :

Post a Comment