Tuesday, June 20, 2017

ஜுலை மாதத் திருவிழா 1.7.2017

                                                            கம்பன் கழகம்
                                                               காரைக்குடி
அன்புடையீர்
வணக்கம்
கம்பன் புகழ்பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும் காரைக்குடி கம்பன் கழகத்தின் ஜுலை மாதத் திருவிழா 1.7.2017 ஆம் நாள் சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு கீழ ஊருணியின் மேற்குப்பக்கம் ஆர்எம்ஆர் ஜவுளிக்கடை அருகில் சு. ராம. (எஸ்.ஆர். எம் ) தெருவில் அமைந்துள்ள மெ. செ. இல்ல அரங்கத்தில் நடைபெறும். 
இறைவணக்கம்
வரவேற்புரை திரு கம்பன் அடிசூடி
பாங்கறி மன்றம்
நடுவர் இலக்கியச்சுடர் த. இராமலிங்கம்
நடைமுறை
கம்பனில் கிளைக்கதைகள் காப்பியக் கதைப்போக்கிற்குத் துறை செய்கின்றனவா என்ற ஐய வினாத் தொடுத்து விவாதத்தினை அறந்தாங்கி செல்வி சு. சுந்தரவள்ளி தொடங்கி வைக்க கீழ்க்கண்ட இளையோர் கேள்விக் கணைகள் தொடுத்து ஐய வினாக்கள் எழுப்ப நடுவர் கலந்துரையாடித் தெளிவு காட்டுவார்.
பங்கேற்போர்
பொள்ளாச்சி திரு, சு. சதீசு குமார்.
திருவாரூர் திரு. த.க. தமிழ் பரதன்
தேவகோட்டை திரு.வி. யோகேஷ் குமார்
நன்றியுரை மு.பழனியப்பன்
சிற்றுண்டி
கம்பன் புகழ் பருக்க கன்னித்தமிழ் வளர்கக் அன்பர்கள் யாவரும் வருக.
அன்பும் பணிவுமுள்ள
கம்பன் கழகத்தார்
நிகழ்ச்சி உதவி
அறமனச் செம்மல் அரு.வே. மாணிக்கவேலு சரசுவதி அறக்கட்டளை, அன்னை மெடிக்கல்ஸ், பொன்னமராவதி
தில்லைஸ்தா்னம் மர பு அறக்கட்டளை நிறுவனர் முனைவர் இராம. கௌசல்யா

Thursday, June 1, 2017

காரைக்குடி கம்பன் கழகத்தின் ஜீன் மாதக் கூட்டம் அழைப்பிதழ்

கம்பன் கழகம்.
காரைக்குடி
அன்புடையீர்
வணக்கம் கம்பன் புகழ்பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும் கம்பன் கழகத்தின் ஜுன் மாதத்திருவிழா 3.6.2017 அன்று சனிக்கிழமை மாலை ஆறு மணிக்கு கீழ ஊருணியின் மேற்குப் பக்கம் செல்லும் சு. ராம. தெருவில் அமைந்துள்ள நூற்றாண்டு கண்ட செட்டிநாட்டுப் பாரம்பரிய மெ.செ. இல்லத்தில் நடைபெறும்.
இறைவணக்கம்
வரவேற்புரை - கம்பன் அடிசூடி
கம்பன் அடிப்பொடி 108 ஆம் பிறந்த நாள் புகழ் அஞ்சலி - திருமதி கவிதாயினி வள்ளி முத்தையா அவர்கள்
பட்டி மண்டபம்
நடுவர் - திரு மு. இராமச் சந்திரன் (தென்காசி) (சிவகாசி)
தலைப்பு
இன்றைய இளைய சமுதாயத்தினர் முன்மாதிரியாகக் கொள்ள வேண்டியவர்
பரதனே
முனைவர் மு.பழனியப்பன்
தமிழ்த்துறைத்தலைவர், அரசு கலைஅறிவியல்கல்லூரி, திருவாடானை
மாணவி அ.தீன்ஷா நூப்
உமையாள் இராமநாதன் கல்லூரி, காரைக்குடி
சடாயுவே
முனைவர் மா. சிதம்பரம்
அழகப்பா கலைக்கல்லூரி, காரைக்குடி
திரு. த. சரவணசெல்வன்
கோவில்பட்டி
தாரையே
முனைவர் சோ. சேதுபதி
அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி
காரைக்கால்
செல்வி ந. அகிலா
சென்னை அண்ணா பல்கலைக்கழகம்
8.30 மணி சிற்றுண்டி
கம்பன் புகழ்பாடிக் கன்னித்தமிழ் வளர்க்க அனைவரும் வருக
அன்பும் பணிவுமுள்ள
கம்பன் கழகத்தார்
நிகழ்ச்சி உதவி
அரு.வே. மாணிக்கவேலு, சரசுவதி ஆச்சி அறக்கட்டளை
அன்னை மெடிக்கல்ஸ், பொன்னமராவதி
நமது செட்டிநாடு இதழ்
காரைக்கு மெ.செ. அ. மெ. பழ மீனாட்சி ஆச்சி
110 ஆம் பிறந்த நாளுக்காக அவர் தம் குடும்பத்தினர்

Friday, May 5, 2017

கம்பனின் இலக்கியக் குடி காரைக்குடி




காரைக்குடி கம்பன் கழகத்தின் 79 ஆம் ஆண்டு கம்பன் திருவிழா  ஏப்ரல் மாதம் 7,8.9 காரைக்குடி கிருஷ்ணா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. ஏப். 10 ஆம் நாள் நாட்டரசன் கம்பன் அருட்கோவிலில் நடைபெற்றது. கம்பன் புகழ் பாடும் சிறந்த இலக்கியவாணர்கள் இதில் கலந்து கொண்டனர். பல்லோரும் கேட்டு மகிழ்ந்தனர்.

முதல் நாள் விழா

  கிருஷ்ணன் கோயிலில் இருந்து தமிழ் அன்பர்கள் புடைசூழ இராமனும் இலக்குவனும் பவனிவர கம்பன் விழா இனிதே தொடங்கியது.
இறைவணக்கம், மலர் வணக்கம், கம்பன் அடிப்பொடி வணக்கம் ஆகியன முறையே நடைபெற்றன.
கம்பன் அடிசூடி அவர்கள் வரவேற்புரை வழங்கினார். அதில் காரைக்குடி கம்பன் கழகத்தின் இடைவிடாத இனிய பணியை நினைவு கூறினார். வந்திருந்த சான்றோர்களை அறிமுகப்படுத்தி அவர் ஆற்றிய வரவேற்புரை அனைவரையும் கவர்ந்தது.
தொடர்ந்து தொடக்கவுரையை பேரா. ந. விஜயசுந்தரி வழங்கினார்.
அதில் அவர் காப்பவனைப் பாடாத கம்பனை மன்னர்கள் உயர்த்தாத இடைவெளியை இன்றைய கம்பன் கழகங்கள் நி்ரப்பி கம்பனுக்குத் தனியாசனம் அமைத்துத் தந்துள்ளனர் என்றார்

தொடர்ந்து கம்பன் அடிசூடி நிறுவியுள்ள பழனியப்பன் மீனாட்சி அறக்கட்டளைப் பொழிவு நூலான கம்பனைப் படைத்த கைகேயி நூலை வெளியிட்டு நாஞ்சில் நாடன் கம்பனின் சொல்வண்ணம் குறித்து உரையாற்றினார். இதனை திரு .அண. வயிரவன் அவர்கள் பெற்று மகிழ்ந்தார்.
மேலும் தமிழில் தொடர் அடைவுகளையே தொடர்வதைத் தனிப்பணியாகக் கொண்ட மதுரை அமெரிக்கன் கல்லூரிப் பேராசிரியர் (ஓய்வு) பாண்டியராஜா அவர்கள் கம்பன் அடிப்பொடி விருது பெற்று மகிழ்ந்தார்கள். அவரின் இனிய பணி நூலாகவும் வரவேண்டும் என்று எழுத்தாளர் நாஞ்சில் நாடன் குறிப்பிட்டார்.
தொடர்ந்து திரு ராஜாராமன் அவர்கள் கம்பனின் இராம வண்ணத்தைப் பேசினார். திருவில்லிப்புத்தூர் ஆண்டாள் பாடிய அரங்கனைக் கம்பன் தன்வசத்தில் பாடினார் என்றார்.
இதனைத் தொடர்ந்து தலைமை தாங்கிய பேரா தி. இராசகோபால் அவர்கள் கம்பன் கழகப் பணிகளைப் பாராட்டினார்.
அவர் கம்பனுக்குத் தேரோட்டியது காரைக்குடி கம்பன் கழகம். அந்தத் தேர் இலக்கிய உலாவாக எங்கும் பரவியது. இராமானுசரின்  நினைவைப் போற்றும் இந்நாளில் கம்பனின் சாதி மதம் பாராத இராம சகோதரபாசம் இராமனுசருக்கு முன்னோடி என்றார்.
இதனைத் தொடர்ந்து போட்டிகளில் பரிசு பெற்ற மாணவ மாணவியர்க்குப் பரிசுகளை திருமதி வள்ளி முத்தையா அவர்கள் வழங்கினார்.

இரண்டாம் நாள் விழா
காரைக்குடி கம்பன் கழகத்தின் சார்பில் இரண்டாம் நாள் கம்பன் திருவிழா 8.4.2017 அன்று ்மாலை ஐந்தரை மணியளவில் நடைபெற்றது. இதில் தனிப் பேருரையைத் திருமிகு பழ. கருப்பையா வழங்கினார். அவர் கம்பனின் கருத்து வண்ணம் என்ற தலைப்பில் உரையாற்றினார். அவர் தன் உரையில் ஒரு கவிஞன் காலம் கடந்து நிற்கிறான் என்றால் அரசியல் கடந்து நிற்கிறான் என்றால் அவனின் தேவை இன்னும் இந்தச் சமுதாயத்திற்குத் தேவை என்று பொருள். திரைப்பட நடிகைகள் போல கலைஞன் வந்ததும் சென்றுவிட முடியாது. அவர்கள் திரையில் தோன்றுவது புகழா இல்லை யில்லை. காலங்கடந்து நிற்பதுதான் புகழ்.  என்று பேசினார். 
இதனைத் தொடர்ந்து கவியரங்கம் ்நடைபெற்றது. இதன் தலைவராக கவிதைப் பித்தன் இ.ருந்து கம்பனின் கவி வண்ணத்தை ஆறு கவிஞர்கள் வழி வெளிப்படுத்தினார். 
கவிஞர்களில் கம்பன் தனித்துவமானவன். அவன் பெயரால் கழகம் என்பதால் நான் கவிதை புனையவந்தேன் என்றார். ்அன்பு பற்றிச் சிங்கப்புர் கவிஞர் திரு அ.கி. வரதராசன் கவிதை வழங்கினார். அவரின் காவடிச் சிந்து வண்ணம் அனைவரையும் ஈர்த்தது. தொடர்ந்து தொண்டு வண்ணம் பற்றி கவிஞர் வி,கே. கஸ்தூரி நாதன் கவிதை வழங்கினார். உண்மைத் தொண்டர்களுக்கு கம்பனில் பல எடுத்துக்காட்டு உண்டு என்றார் அவர். தொடர்ந்து கம்பனின் வீர வண்ணமே அனைத்து வண்ணங்களுக்கும் சிறப்பு என்றார் வல்லம் தாஜ்பால். இவரைத் தொடர்ந்து தோழமை வண்ணம் பற்றி தஞ்சை இனியன் கவி பாடினார். வேடம் போடாத வேடன் குகனின் தோழமை வண்ணத்தை அவர் தந்தார். தொடர்ந்து அறம் பற்றி கிருங்கைசேதுபதி பாடினார். அறத்தால் உலகை வெல்லலாம் என்றார் அவர். நிறைவாக காதல் வண்ணம் பாடினார் திரு வி.ம. இளங்கோவன். 
கவியரங்கின் சில முத்துக்கள் பின்வருமாறு

கணேசனே பிள்ளையார் சுழிி போட்டுத் தொடங்கியது கம்பன் கழகம்
அதனை அவன் தம்பி பழனியப்பன் தற்போது நிகழ்த்துகிறார்.

ஏடிஎம் பொத்தானை அமுக்கினால் பணம் தரும்
வாக்கு எந்திரம் பணத்தினைத் தள்ளினால் பொத்தானை அமுக்கும். 


மூன்றாம் நாள் விழா 
காரைக்குடி கம்பன் கழகத்தின் மூன்றாம் நாள் விழா காலையும் மாலையும் என முழுநான் விழாவாக அமைந்தது. 
காலையில் கோட்டையூர் வள்ளல் அழகப்பர் அவர்கள் பிறந்த பராம்பரிய வீட்டில் செட்டிநாடும் செந்தமிழும் என்ற தலைப்பிலான கருத்தரங்காக மலர்ந்தது. 
இதற்குத் தலைமை வகித்து செட்டிநாடு இதழின் புரலவர் திரு. இராஜாமணி முத்துக்கணேசன் அவர்கள் சிறப்புரை ஆற்றினார். தன்னுரையில் நகரத்தார் சமுதாயத்தின் சிறப்புகள் அறம் பேணும் பண்புகள் பற்றி எடுத்துரைத்தார் . மேலும் நாட்டரசன் கோட்டை கம்பர் அருட்கோயிலைச் செப்பம் செய்யும் பணியைச் செட்டிநாடு குழுமம் செய்ய முன்வரும் என்பதையும் குறிப்பிட்டார். 
மேலும் செட்டிநாடு குழுமத்தின் சார்பாக நிதியளித்தும் சிறப்பித்தார்கள். 

மேலும் இவ்விழாவில் சிங்கப்பூர் கவிஞர் அ.கி. வரதராசன் எழுதிய அரிய மனிதர் அழகப்பர் என்ற நூலை கவிதாயினி வள்ளி முத்தையா வெளியிட முதற்பிரதியைப் பெற்றுக்கொண்டார் திரு. இராஜாமணி முத்துக்கணேசன்.

தொடர்ந்து செட்டிநாடும் செந்தமிழும் என்ற தலைப்பில் கட்டுரையாளர்கள் வழங்கிய கட்டுரைகளைத் தொகுத்து உருவாக்கப்பெற்ற செந்தமிழ் வளர்க்கும் செட்டிநாடு என்ற நூலைத் திரைப்பட இயக்குநர் திரு கரு. பழனியப்பன் வெளியிட்டு உரை நிகழ்த்தினார். இதில் மாறிவரும் சமுதாயச் சூழல் பற்றிப் பேசினார். 

இதன் பிறகு கருத்தரங்கம் ஐந்து அரங்குகளில் நடைபெற்றது.

கருத்தரங்க நிறைவு விழா 3.30 மணிக்குத் தொடங்கியது. இதற்குத் தஞ்சாவூர் மூத்த இளவரசர் பாபாஜி  ராஜாசாகிப் போன்ஸ்லே அவர்கள் தலைமைதாங்கி நகரத்தார் பரம்பரை பற்றிப் பேசினார். திரு. சொ. சொ.மீ  சுந்தரம் அவர்கள் சிறப்புரையாற்றினார். 

மாலை நிகழ்ச்சி, காரைக்குடியில் கிருஷ்ணா திருமண மண்டபத்தில் பட்டிமண்டபமாக நடைபெற்றது. சொல்வேந்தர் சுகி.சிவம் நடுவராக இருந்து இதனை வழி நடத்தினார்.  பேராசிரியை ருக்மணி பன்னீர் செல்வம், செல்வி நா. ஹேமலாதா,செல்வி மணிமேகலை ஆகியோர் இராமனுக்கு மிகுதியும் இக்கட்டை உண்டாக்கியவர் கைகேயி என்று வாதிட்டனர். 
பேராசிரியர் புனிதா ஏகாம்பரம், திரு. த.க. தமிழ்பரதன்,திரு. தமிழ் திருமால் ஆகியோர் இராமனுக்குப் பெரிதும் இக்கட்டை உண்டாக்கியவர் சுக்ரீவனே என்று பேசினர்.
பேராசிரியர் பழ.முத்தப்பன், திரு. சு. சதீஸ்குமார், பேராசிரியர் மா. சிதம்பரம் ஆகியோர் இராமனுக்கு மிகுதியும் இக்கட்டை உண்டாக்கியவர் வீடணனே என்று வாதிட்டனர்.
முக்குழுவின் வாதங்களைக் கேட்டு வீடணனே என்று பட்டிமன்றத் தீர்ப்பினை எழுதினார் சொல்வேந்தர் சுகி.சிவம்.

நான்காம் நாள் விழா
கம்பன் அருட்கோயில் வழிபாடு நாட்டரசன் கோட்டையில்நடைபெற்றது, மலர்வணக்கம்,அ ருட்கவி ஐந்து ஆகியன நிகழ்ந்தன. வரவேற்புரையை திரு கண.சுந்தர் வழங்கினார். இவ்விழாவில் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையேற்று கம்பன் கவியின்பத்தை மொழிந்தார்கள். தொடர்ந்து திரு.வி,யோகேஸ்வரன் கம்பனின் ஆற்றல்வண்ணம் பற்றிப் பேச, திரு. இரா. மாது கம்பனின் பாத்திரவண்ணம் பற்றிப் பேச சுவைஞர்கள் 
சுவைத்தனர். 

நன்றியுரையுடன் விழா இனிதே நிகழ்ந்தது. 

Wednesday, April 26, 2017

கவிஞர் ரெ. முத்துக்கணேசனார் 90 கருத்தரங்கு, காரைக்குடி கம்பன்கழகம்

கவிஞர் ரெ. முத்துக்கணேசனார் தம் 90 ஆம் அகவைகாண் விழா வரும் ஆகஸ்டு மாதத்தில் காரைக்குடி கம்பன் கழகக் கூட்டமாக மலர உள்ளது. இதற்காகச் சில சிறப்பு ஏற்பாடுகள் செய்யக் காத்திருக்கிறோம்.
வழக்கம் போல ஆகஸ்டு முதல் சனிக்கிழமை மாதக் கூட்டம். அறிஞர்கள் கலந்து கொள்வர்.
இதுதவிர ஒரு கருத்தரங்கம் வைத்துக் கொள்ள்லாம் என்ற எண்ணம் எழுகிறது.
கவிஞர் ரெ. முத்துக்கணேசனாரின் படைப்புகள் பற்றி ஒரு நாள் கருத்தரங்கம் நடத்த எண்ணம்.
மீனாட்சி பள்ளியில் காலை அல்லது மதியம் கட்டுரைகள் வாசிக்கும் கருத்தரங்கம் வைக்கலாம் என்று எண்ணுகிறோம்.
குறிப்பாக முத்தொள்ளாயிரத்திற்கு ரெ. முத்துக்கணேசனார் எழுதிய உரை சிறப்பானது. அது குறித்தும் வைக்கலாம் என்று எண்ணம்
இதற்கா்ன கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன. இக்கட்டுரைகள் இணைய இதழில் வெளிவர வாய்புபள்ளது.இவ்விதழுக்கு ஐஎஸ்எஸ் என் தரமதிப்பு உண்டு.

காரைக்குடி கம்பன் கழக வலைப்பூவில் இக்கட்டுரைகள் இடம்பெறும்.
கட்டுரைகளுக்குக் கட்டணம் இல்லை.
கட்டுரைகள் ஜுலை 15க்குள் வந்து சேர வேண்டும் எப்போதும் போல் பக்கவரையறை (5 பக்கம்) யுனிகோடு எழுத்துருவில் kambantamilcentre@gmail.com என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
ஒன்றிரண்டு கட்டுரைகள் என்றால் மதிய அமர்வாக வைக்கலாம்
முப்பதிற்கும் மேற்பட்ட கட்டுரைகள் வந்தால் ஒருநாள் கருத்தரங்காக வைக்கலாம்.
இதுகுறித்து கருத்து அறிவிக்க அன்புடன் வேண்டுகிறோம்.
எப்போதும் போல் கட்டுரைத் தலைப்புகளைப் பகிர்ந்து கொள்ள எங்களுக்கு மின்னஞ்சல் அல்லது முகநூல் வழியாக அறிவிக்கவும்.
தங்கள் அன்பும் பணிவுமுள்ள
கம்பன் கழகத்தார்

Monday, April 24, 2017

மே மாதக் கூட்டம் (2017)


எண்பதாம் ஆண்டுத் தொடக்க மாதக் கூட்டம்

கம்பன் புகழ்பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும் காரைக்குடி கம்பன் கழகத்தின் முத்துவிழாப் புத்தாண்டில்
முதற் சிறப்புக் கூட்டம் 6-5-2017 ஆம் நாள் சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு
கம்பன் அடிப்பொடி சா. கணேசன் முன்னாளில் கம்பன் புகழ்பாடிக் களித்த காரைக்குடி சிவன் கோயில் தெற்குவீதியில் அமைந்துள்ள
மீனாட்சி பெண்கள் மேல்நி்லைப்பள்ளி வளாகத்தில் நடைபெறுகிறது.
அவ்வயம் ஆழ்வார் ஆய்வுமையத்தினை நிறுவி ஆழ்வார்கள் அருள் அமுதத்தையும் கம்ப நாட்டாழ்வார் கவின் கவிக் கனிச்சாறையும் பல்லோரும் பல்லாண்டுகளாகப் பருகப் பெருங்கொடையளித்து வைணவப் பாற்கடலை வாய் மணக்க உண்டு செவி மணக்கச் சிந்தி மகிழும் செந்தமிழ்ப் பேரறிஞர்களுக்கு விருதுகளும் வழங்கிப் புரவலராக விளங்கவதோடு இப்போது எம்பெருமானார் எதிகட்கு இறைவனாம் எதிராசர் மதத்தில் புரட்சி செய்த மகான் இராமானுசர் ஆயிரமாம் திருநட்சத்திரத்திரப் பெருவிழாக்கண்டு நாமெல்லாம் மொண்டு உண்டு மகிழ நூற்றுப் பதினான்கு நூல்கள் எழுதி உடையவர் புகழ்பாடி உன்னதத் தமிழை உள்ளன்பால் வழுத்தி வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கச் செய்து போய பிழையும் புகுதருவான் நின்றனவும் தீயினில் தூசாகச் செய்தருளும் வள்ளல்
டாக்டர் எஸ். ஜகத்ரட்சகன் அவர்களின்
நற்றமிழ்த் தொண்டிற்கு நன்றி பாராட்டி
ஆழ்வார் அனுஜர்
எனும் விருதுப் புகழாரம் சூட்டி மகிழ்கிறோம்.
டாக்டர் சுதா சேஷய்யன் அவர்கள் தலைமையேற்று பாரட்டுரையும், ஆழ்வார் இராமானுஜர் அமுது உரையும் அருளிச்சிறப்பிக்கிறார்கள். அன்பர்கள் யாவரும் கலந்து கொண்டுக் கன்னித்தமிழ்ப் பருகிட வருக. வருக.
-----------------------------------------------------------------------------
நிகழ்ச்சி நிரல் (மாலை 5.30 மணி முதல்)
இறைவணக்கம்
செல்வி கிரேசி

வரவேற்பரை- 
திரு கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன்

தலைமை உரையும் பாரட்டுரையும்
ஆழ்வார் இராமானசர் புகழ் அருளுரையாய்
டாக்டர் சுதா சேஷையன்
ஆழ்வார் அனுஜர் விருது வழங்கல்
திரு. அரு. வே. மாணிக்கவேலு
விருதுரை ஆக்கமும் வாசித்தலும்
கவிஞர் கிருங்கை சேதுபதி
கம்பன் கழக முத்துவிழாத் தொடக்க வாழ்த்துரை
1947 ஆம் ஆண்டு ஒன்பதாம் ஆண்டுக் கமபன் விழாவில் திரு.விக. தலைமையில் பங்கேற்று வாழ்க உலகம் என வாழ்த்திய மூதறிஞர் கவிஞர்
ரெ. முத்துக்கணேசனார்

ஏற்புரையும் அமுத உரையும்
ஆழ்வார் அனுஜர் டாக்டர் எஸ். ஜகத்ரட்சகன்
நன்றியுரை
பேரா. மு.பழனியப்பன்.
விருந்தோம்பல்
நிகழ்ச்சி உதவி
நமது செட்டிநாடு மாத இதழ்
அருவே. மாணிக்கவேலு சரசுவதி அறக்கட்டளை
தம் தாயார் காரைக்குடி மெ.செ. அ.பழ. செட்டிச்சி ஆச்சி என்ற உண்ணாமலை ஆச்சி நினைவாக அவர்தம் புதல்வர் திரு. ப. அ. பழனியப்பன் (சோலை) உண்ணாமலை தம்பதியர்





Wednesday, April 12, 2017

Return to frontpage Contributions to Tamil from doyens of Chettinad recalled


KARAIKUDI APRIL 11, 2017 23:02


International conference on ‘Chettinad and its contribution to Tamil,’ organised by Karaikudi Kamban Kazhagam in Karaikudi recently.   | Photo Credit: handout_e_mail
A.V. Meyyappa Chettiar, a pioneer in popularising songs of Subramania Bharathi

Avichi Meyyappa Chettiar, popularly known as A. V. Meyyappa Chettiar or AVM is known to many as Indian film producer, director and philanthropist but not many know he was a great lover of Tamil and the pioneer in popularising the patriotic songs of national poet Subramania Bharathi.
Much before government nationalised the literary works of scholars, poets and writers, AVM dedicated Bharathi songs to the people of Tamil Nadu after acquiring the rights of the songs held by Surajmal and Sons, a recording company during the production of ‘Naam Iruvar’ (we two), his 1947 blockbuster.
The great lover of Tamil, AVM gave away his private ownership of Bharathiyar’s Songs freely to the government at the initiative of then Chief Minister Ommandhur Reddiyar and later the songs legally became public property, Pala. Palaniappan, secretary of the Karaikudi Kamban Kazhagam said, while addressing an international conference here. Mr. Palaniappan was addressing the conference on “Chettinad and its contribution to Tamil,’ organised in connection with 79th ‘Kamban Tiruvizha’ held here from April 7 to 10. Presenting his paper on ‘Tamizhal Thalai nimirndha Tamizhargal,’ he recalled the contributions made by doyens from the land of Chettinad, including AVM, SAP Annamalai, the founder editor of Kumudham Tamil weekly and Koviloor Muthuramalinga Aandavar, the 19th century pontiff of Koviloor mutt.
AVM had used five of Bharathiyar’s songs in ‘Naam Iruvar’ and the songs sung by Carnatic musician D. K. Pattammal and actor singer T. R. Mahalingam became instant hits. The film, released on January 15, 1947 opened with Bharathiyar’s ‘Aaduvome pallu paaduvome,’ celebrating India’s independence eight months ahead, Mr. Palaniappan said.
AVM advertised the film in posters, saying “Bharathi in talkie, hear the national songs of the immortal poet,” he said. A true nationalist, AVM wore Khadi till his death, Mr. Palaniappan recalled. A great lover of Tamil, AVM allowed the Madras Kamban Kazhagam to hold its annual festival at AVM Rajeswari Kalyana Mandapam in Chennai free of cost. He willed that not even electricity to be charged, he said.
Mr. Annamalai was the first Tamil to print four lakh copies of Kumudham, the weekly in regional language in south east Asia and brought pride to the Tamils, he said. Ninety seven delegates from Canada, Malaysia, Singapore, Sri Lankan and Australia presented papers.

thanks ti the hindu

கம்பன் திருவிழாவின் சில பதிவுகள்.




































Wednesday, March 22, 2017

காரைக்குடி கம்பன் கழக ஆண்டுவிழா, திருவிழா அழைப்பு

காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கம்பன் திருவிழா நிகழ் நிரல்
நாள்: 7- 4 - 2017, மகநாள், வெள்ளிக்கிழமை, மாலை 5.00 மணி
இடம்: கிருஷ்ணா கல்யாண மண்டபம், கல்லுக்கட்டி , காரைக்குடி
தலைவர்:  பேராசிரியர் தி. இராசகோபாலன்
இறைவணக்கம்             :திருமதி லெட்சுமி கிருஷ்ணமூர்த்தி
மலர் வணக்கம்            : திருமதி ராதா ஜானகிராமன்
கம்பன் அடிப்பொடி அஞ்சலி
வரவேற்புரை               : திரு கம்பன் அடிசூடி
தொடக்கவுரை              : பேராசிரியர் ந. விஜயசுந்தரி
கம்பன் அடிசூடி பழ.பழனியப்பன் எழுதி வானதி பதிப்பகம் வெளியிடும்
மீனாட்சி பழனியப்பா அறக்கட்டளைச் சொற்பொழிவு நூல் கைகேயி படைத்த கம்பன் வெளியீடு : திரு. நாஞ்சில் நாடன்
அமெரிக்கன் கல்லூரி மேனாள் துணை முதல்வரும், கணினித் துறை இயக்குநருமான முனைவர் ப. பாண்டியராஜா அவர்களுக்கு அவர்தம் கம்பராமாயணம் தொடரடைவு (www. tamilconcordance.in) பணிகளைப் பாராட்டி கம்பன் கழகம் பணிவுடன் அளிக்கும் காரைக்குடி தெ. இலக்குவன் நினைவைப் போற்றி அவர்தம் குடும்பத்தார் நிறுவியுள்ள கம்பன் அடிப்பொடி விருது வழங்கிப் பாராட்டு         : சாகித்திய அகாதமி விருதுபெற்ற
                                  எழுத்தாளர் திரு நாஞ்சில் நாடன்
கம்பனின் இராம வண்ணம்       ஸ்ரீவில்லிப்புத்தூர் திரு. பி. ராஜாராம்
மாணக்கர்களுக்குப் பரிசளிப்பு           திருமதி வள்ளி முத்தையா
தலைமை உரை                 பேராசிரியர் தி. இராசகோபாலன்
காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கம்பன் திருவிழா நிகழ் நிரல்
நாள்: 8 - 4 - 2017, பூர நாள், சனிக்கிழமை, மாலை 5.30 மணி
இடம்: கிருஷ்ணா கல்யாண மண்டபம், கல்லுக்கட்டி , காரைக்குடி
                          
தனிப்பேருரை
கம்பனின் கருத்து வண்ணம்
சிந்தனைச் சிற்பி
திரு. பழ. கருப்பையா
கவியரங்கம்
தலைவர்
கவிச்சுடர் கவிதைப் பித்தன்
தலைப்பு:
கம்பனின் கவி வண்ணத்தில்
பொருள்                     கவிவாணர்
               அன்பு                 திரு. அ.கி. வரதராஜன்
               அறம்                திரு கிருங்கை சேதுபதி
               தோழமை            திரு. தஞ்சை இனியன்
               தொண்டு             திரு. வீ.கே. கஸ்தூரிநாதன்
               காதல்                திரு. வீ.ம. இளங்கோவன்
               வீரம்                 திரு வல்லம் தாஜ்பால்
காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கம்பன் திருவிழா நிகழ் நிரல்
நாள்: 9 - 4 - 2017, உத்தர நாள், ஞாயிற்றுக்கிழமை, காலை 9.30 மணி
இடம்: வள்ளல் அழகப்பர் அவர்தம் பேத்தி கவிதாயினி வள்ளி முத்தையா அவர்களின் பாரம்பரியமான நூற்றாண்டு கடந்த செட்டிநாட்டு இல்லம் கோட்டையூர்
செட்டிநாடும் செந்தமிழும் என்ற தலைப்பிலான
உலகத் தமிழ் பன்னாட்டுக் கருத்தரங்கம் - தொடக்கவிழா
தலைமை   : திரு. இராஜாமணி முத்துக்கணேசன்
வரவேற்புரை: திரு கம்பன் அடிசூடி
தொடக்கவுரை: செட்டிநாட்டு இளவல் செட்டிநாடு குழும நிர்வாக இயக்குநர்
திரு எம்.ஏ. எம் ஆர். முத்தையா
சிங்கப்பூர் கவிஞர் திரு. அ.கி. வரதராஜன் எழுதிய வானதி பதிப்பகம் வெளியீடான அரிய மாமனிதர் அழகப்பர் கவிதைநூல் வெளியீடு:
கவிதாயினி வள்ளி முத்தையா
முதற்பிரதியினைப்  பெற்றுத் தலைமைஉரை நமது செட்டிநாடு இதழ்ப் புரவலர் செட்டிநாடு சிமெண்ட்ஸ் இயக்குநர் திரு. இராஜாமணி முத்துகணேசன்
ஏற்புரை: கவிஞர் திரு. அ.கி . வரதராஜன்
மையக் கருத்துரையும் ‘செட்டிநாடும் செந்தமிழும்’ ஆய்வுக்கோவை வெளியீடும்
திரைப்பட இயக்குநர் திரு. கரு. பழனியப்பன்
முதற்பிரதியினைப் பெற்று வாழ்த்துரை: திரு.அரு.வே. மாணிக்கவேலு
முற்பல் 11 மணி மதல் உணவு இடைவேளை வரை பேராளர்கள் ஐந்து அமர்வுகளாக வெவ்வேறு இடங்களில் தத்தம் கட்டுரைகளை அறிமுகப்படுத்திச் சுருக்கத்தினை மட்டும் வாசித்தளிப்பர்
காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கம்பன் திருவிழா நிகழ் நிரல்
நாள்: 9 - 4 - 2017, உத்தர நாள், ஞாயிற்றுக்கிழமை, பிற்பகல் 3.00  மணி
இடம்: வள்ளல் அழகப்பர் அவர்தம் பேத்தி கவிதாயினி வள்ளி முத்தையா அவர்களின் பாரம்பரியமான நூற்றாண்டு கடந்த செட்டிநாட்டு இல்லம் கோட்டையூர்
செட்டிநாடும் செந்தமிழும் என்ற தலைப்பிலான
உலகத் தமிழ் பன்னாட்டுக் கருத்தரங்கம் – நிறைவு விழா
இறைவணக்கம்
வரவேற்புரை
 பேராசிரியர் மா. சிதம்பரம்
தலைமையுரையும்
சிறந்த ஆய்வுக் கட்டுரைகளுக்குப் பரிசு வழங்குதலும்
தகைமிகு தஞ்சாவூர் மூத்த இளவரசர்
திரு. பாபாஜி ராஜாசாகிப் போன்ஸ்லே
நிறைவுரை
கவிஞர் திரு. சொ. சொ. மீ. சுந்தரம்
நன்றியுரை
பேராசிரியர் செ. செந்தமிழ்ப்பாவை

(கருத்தரங்கிற்கு வரும் கட்டுரையாளர்களுக்கும், நோக்கர்களுக்கும் மதியஉணவு ஏற்பாடு செய்யப்பெற்றுள்ளது)

காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கம்பன் திருவிழா நிகழ் நிரல்
நாள்: 9 - 4 - 2017, உத்திர நாள், ஞாயிற்றுக் கிழமை, மாலை 5.30 மணி
இடம்: கிருஷ்ணா கல்யாண மண்டபம், கல்லுக்கட்டி , காரைக்குடி
பட்டிமண்டபம்
நடுவர்: சொல் வேந்தர் திரு. சுகி.சிவம்
தலைப்பு
இராமனுக்கு மிகுதியும் இக்கட்டான சூழலை உண்டாக்கியவர் யார்?
கைகேயியே!
பேராசிரியர் து. ருக்மணி,
செல்வி நா. ஹேமலதா,
பேரா சுமதிஸ்ரீ
சுக்ரீவனே!
பேராசிரியர் புனிதா ஏகாம்பரம்,
திரு.த.க. தமிழ்பாரதன்,
பேரா. தமிழ்திருமால்
வீடணனே!
தமிழாகரர் பழ. முத்தப்பன்,
திரு. சு. சதீஸ்குமார்,
பேரா. மா.சிதம்பரம்

காரைக்குடி கம்பன் கழகம் நடத்தும் கம்பன் திருவிழா நிகழ் நிரல்
நாள்: 10 - 4 - 2017, அத்தத் திரு நாள், திங்கட் கிழமை, மாலை 5.00 மணி
இடம்: நாட்டரசன் கோட்டை, கம்பன் அருட்கோவில்
தலைவர் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார்
கம்பன் அருட்கோயில் வழிபாடு
மலர் வணக்கம் திரு. ஜி.எஸ். வி. பைரவ குருக்கள்
கம்பன் அருட்கவி ஐந்து
அமிர்தவர்ஷினி இசைப்பள்ளி ஆசிரிய மாணாக்கர்
இயக்கம் திரு. த. வெற்றிச்செல்வன்
இறைவணக்கம்
வரவேற்புரை
திரு. கண. சுந்தர்
தலைவர் உரை
‘‘கம்பனின் ஆற்றல் வண்ணம்’’
திரு. வி. யோகேஷ்குமார்
‘‘கம்பனின் பாத்திர வண்ணம்’’
திரு. இரா. மாது
நன்றியுரை பேரா. மு.பழனியப்பன்

வாழிய செந்தமிழ்