Tuesday, October 27, 2015

காரைக்குடி கம்பன் கழகத்தின் நவம்பர் மாதக் கூட்டம் 2015


                                              கம்பன் கழகம், காரைக்குடி                                            
                                                         61 ஆம் கூட்டம்
அன்புடையீர்
வணக்கம்
கம்பன் புகழ் பாடிக் கன்னித்தமி;ழ் வளர்க்கும் கம்பன் கழகத்தின் நவம்பர் மாதக்கூட்டம் 7-11-2015 ஆம் நாள் சனிக்கிழமை மாலை 6.00 மணிக்கு கல்லுக்கட்டி மேற்கு கிருஷ்ணன் கோயிலை அடுத்துள்ள கிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது.

இறைவணக்கம்          - செல்வி. எம். கவிதா
வரவேற்புரை:                  திரு. கம்பன் அடிசூடி
தலைமை உரையும்
                                                கவிதாயினி வள்ளி முத்தையா எழுதிய உமாபதிப்பக                                                     வெளியீடான ரசிகமணி டி.கே.சி பிள்ளைத்தமிழ்                                                                நூல்வெளியீடும்
                                         சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி தகைமிக                    
                                                  நீதியரசர் வி. இராம சுப்பிரமணியம்

நூல் பாராட்டும் கம்பரசிகமணி உரையும்
                                                 நாவுக்கரசி, ஞானவாணி திருமதி                                                                                               இளம்பிறை மணிமாறன்

ஏற்புரை: கவிதாயினி திருமதி வள்ளி முத்தையா

நன்றியுரை: பேராசிரியர் செந்தமிழ்ப்பாவை

கம்பன் புகழ் பருகிக் கன்னித்தமிழ் வளர்;க்க அன்பர்கள் யாவரும் வருக.


அன்பும் பணிவுமுள்ள
கம்பன் கழகத்தார்

நிகழ்ச்சி உதவி
1.10.2015 தம் எண்பதாவது பிறந்த நாள் கண்டு மகிழ்ந்த காரைக்குடி திரு. மெ. செ. ராம. மெய்யப்ப செட்டியார் திருமதி அழகம்மை ஆச்சி தம்பதியருக்குப் பல்லாண்டு. பல்லாண்டு

காரைக்குடி திரு. எஸ். கோபால் செட்டியார், திருமதி வெ. தருமாம்பாள் ஆச்சி தம்பதியரின் புதல்வர். 23.8.2015 தன் இருபத்தி ஐந்தாவது பிறந்தநாள் கண்டு மகிழ்ந்த செல்வன் ஜி. அருணாசலம் அவர்களுக்கும் அவர்கள் குடும்பத்தாருக்கும் பல்லாண்டு, பல்லாண்டு. 

Thursday, October 15, 2015

அந்தமானுக்கு வர விரும்புபவர்கள் வரலாம்.

றக்குறைய ஒரு நூறு அன்பர்கள் ஆய்வாளர்கள் அந்தமானில் கால் பதித்து கம்ப ஆய்வினை நிகழ்த்த முன்வந்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் நன்றி.

இன்னும் வர எண்ணுபவர்களுக்கு இன்னும் வாசலைத் திறந்து வைக்கிறோம். 

திரு. கிருட்டிண மூர்த்தி, 9434289673 (அந்தமான்) அவர்களுடன் தொடர்பு கொண்டுத் தாங்கள் கம்ப ஆய்வினை நிகழ்த்த அந்தமான் வரலாம். 

Saturday, October 10, 2015

அந்தமான் செல்லும் வாய்ப்பினை நிறைவுசெய்கிறோம்.

காரைக்குடி கம்பன் கழகம்  அந்தமான் கம்பன் கழகத்துடன் இணைந்து நடத்தும் பன்னாட்டுக் கருத்தரங்கிற்கு வருகை தருவோர் பட்டியல் இறுதி செய்யப்பெற்று விட்டது. வருகை தர ஒப்புதல் அளித்த அனைவருக்கும் நன்றிகள்.
கட்டுரை மட்டும் அனுப்ப விரும்புவோர் மட்டும் இனித் தொடர்க. 

அந்தமானுக்கு வருகிறார்கள். கம்பன் காட்டிய அழகு பற்றி கட்டுரைக்க, கேட்க, ரசிக்க

FINAL LIST AS On 10 10 2015 FOR ANDAMAN Conference


1.  Mrs B. NAGAJOTHI   (F) Chinnamani Balakrishnan        
2. Mr K.M. KAMARAJAN  (F) Mariappa Nadar                     
3. Mr KANNAN PRASAD (F) Kamarajan                              

4. Mr N.THIRUNAVUKKARASU (F) Narayanan                 
5.Mr B.NEHRUJI (F) Balasubramaniam                                 

6.Mrs CHANDRA (H) Subramanian                                       
7.Ms.ARUNA PRIYADHARSHNI (F) Subramanian             

8.Mr M.PALANIAPPAN (F) PL.Muthappan                          
9.Mr.R.VELLASAMY    (F) Ramasami                                

10.Mrs RANI GANESAMANI (F) Muthiah                         
11.Mrs SAKUNTALA (F) KR Arumugam                           
12.Mr RAJARAM (F) Subramanian                                      

13.Mrs SENTHAMIZH PAVAI RAMANATHAN              
           (F) Sedhuraman                  
14.Ms GEETHANJALI RAMANADHAN                             
           (F) Ramanadhan Mahalingam    

15.Mr NEELAKANDA PILLAI THANUMALAYA
          PERUMAL PILLAI                                                   
           (F) Thanumalaya Perumal Pillai
16.Mrs KOLAMMAL DESIAPPAN NAGAMMAL          
            (H) Neelakanda Pillai
17.MsNAGALEKSHMI NEELAKANDA PILLAI KOLAMMAL 
        (F) Neelakanda Pillai                   
18.Ms BHARATHY (F) Neelakanda Pillai                           

19.Mr NALLA TAMBI (F) Kalimuthu                                 
20.Mrs MALLIKA (H) Nalla Tambi                                     

21.Mr SUBRAMANIAN Dr G (F) R Govindasami              
22.Mrs GEETHA RANI (F) RAJAGOPALAN                     

23.Mr CHELLAPPAN (F) Kasi Viswanathan                      

24.Mr M.SUBRAMANIAN (F) Meenakshisundarm RM    
25.Mr KANNAN (F) Meenakshisundaram                         
26.Mrs SEETHALAKSHMI (H) Kannan                           

27.Mr PALANIAPPAN (F) Palaniappa                              
28.Mrs THEIVANAI PALANIAPPAN (H) Palaniappan       

29. Mrs T A Laksmi (H) Rajan  Singapore  
30. mrs L ALAMELU (F) Ramaswamy Venkatachalam  


31. Mr VRIDHACHALEM SUBRAMANIAM       
           (F) VridhachalemPillay
32. Mrs VASANTHA SUBRAMANIAM             
           (H) Subramaniam

33. Mr K BHOOPATHY  (F) Karuppannan 
34. Mr S SATHASIVAM  (F) Subramani
35. Mrs M JAYALAKSHMI (H) Kanakarathinam  
36. Ms S MANGALESWARY (F) K Sathaiah 
37. Mr M. CHITHAMBARAM (F) C.P.Manickam  
38. Mr T K VEDHARAJA (F) V Krishnasabapathy 
39. Mrs V R JEYASALA (F) Vairavan Ramaswami 
40. Ms. P S SELVAMEENA (F) P Subramanian 
41. Mr M DURAI (F) A Malayandi 
42. Mr K BALUSAMY (F) Kuppanagounder

43.Mrs SUDHAMATHI R (H) Selvaraj Samuel   
44. Mr VARUN (F) Selvaraj Samuel 

45. Mrs PARAMESWARI  (F) Chinniah M 
46. Mr KRISHNAMURTHY M S  (F) K Munisamy 
47. Mr K. MURUGESAN (F) Karuppannan 


தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன் அவர்களின் பேச்சுரை

இலக்கிய அமைப்புகள் உருவாக வேண்டும், பிரியக்கூடாது!:தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன்

First Published : 04 October 2015 04:36 AM IST
தமிழை வளர்ப்பதற்கு ஊருக்கு ஊர் புதிது புதிதாக இலக்கிய அமைப்புகள் உருவாக வேண்டுமே தவிர, இருக்கின்ற இலக்கிய அமைப்புகள் பிரிந்து பிரிந்து செயல்படக் கூடாது என தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன் வலியுறுத்தினார்.
காரைக்குடி, கல்லுக்கட்டி மேற்கு கிருஷ்ணா கல்யாண மகாலில் சனிக்கிழமை மாலை நடைபெற்ற காரைக்குடி கம்பன் கழகத்தின் நிகழ்ச்சியில் புதுச்சேரி கம்பன் கழகச் செயலர் கம்ப காவலர் தி. முருகேசனின் நினைவேந்தல் கூட்டத்தில் அவர் மேலும் ஆற்றிய உரை:
தமிழகத்தில் ஒரு காலத்தில் தீ பரவட்டும் என்ற கோஷம் எழுந்தபோது, "கம்பன் அடிப்பொடி' தலைமையில் இதே காரைக்குடி மண்ணில்தான் "கம்ப காதை தீயென பரவட்டும்' என கம்பன் புகழ் பாடி தமிழ் வளர்க்கும் கூட்டம் வீறுகொண்டு எழுந்தது.
கம்பன் அடிப்பொடியின் தலைமையில் கம்பன் திருநாளை விழாவாகக் கொண்டாடியதும், தமிழ்த் தாய்க்கு ஆலயம் எழுப்பியதும் இதே காரைக்குடி மண்ணில்தான்.
பல்லாயிரக்கணக்கான இளைஞர்களுக்கு கம்ப காதையின் மூலம் தமிழ்ப் பற்றை வளர்த்த காரைக்குடி கம்பன் அறநிலை பிரிந்து கிடப்பது தமிழுக்கு ஏற்பட்டிருக்கும் சோதனை. 2004-இல் "தமிழால் இணைவோம்; தமிழுக்காக இணைவோம்' என்கிற கோஷத்தை தில்லியில் கூடிய தமிழ் இலக்கிய அமைப்புகளின் மாநாட்டில் எழுப்பிய தினமணியால் கம்பன் கழகங்களின் தாய்க் கழகமான கம்பன் கழகம் பிரிந்து கிடப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
தினமணி ஆசிரியராக பொறுப்பேற்ற கடந்த 8 ஆண்டுகளாக, எங்கெங்கு தமிழகத்தில் இலக்கிய அமைப்புகள் தங்கள் நிகழ்ச்சிகளுக்கு அழைக்கின்றனரோ, அங்கெல்லாம் பணிகளுக்கு இடையேயும் சென்று வருவதை வழக்கமாகக் கொண்டுள்ளதன் காரணம், தமிழ் அமைப்புகள் உற்சாகமடையட்டும், தமிழ் இலக்கியப் பணியைத் தொடரட்டும் என்பதற்காகத்தான். தமிழகத்தில் ஊருக்கு ஊர் தமிழ் இலக்கிய அமைப்புகள் உருவாக வேண்டும்.
இலக்கியம் பேசப்பட வேண்டும். அதன்மூலம், அடுத்த தலைமுறை இலக்கியப் பேச்சாளர்கள் உருவாக வேண்டும். மக்களுக்குத் தமிழ்ப்பற்றும் இலக்கியத்தின்பாற்பற்றும் ஏற்பட வேண்டும் என்பதுதான் தினமணியின் குறிக்கோள்.
இலக்கிய அமைப்புகளின் எண்ணிக்கை கூடுதலாக வேண்டுமே தவிர தற்போதுள்ள இலக்கிய அமைப்புகள் இரண்டாகப் பிரிவது என்பது ஏற்புடையதல்ல.
செயல்பட்டு கொண்டிருக்கின்ற தமிழ் இலக்கிய அமைப்புகள் பிரிவது தமிழுக்கு பலமல்ல என்பதை பிரிந்திருக்கும் அமைப்புகளின் இரு தரப்பினரும் உணர வேண்டும்.
தமிழ் காப்பாற்றப்பட வேண்டும் என்ற கால கட்டத்தில் இருக்கும்போது, தமிழ் அமைப்புகளில் ஏற்படும் சிறு பாதிப்பு கூட தமிழைப் பாதிக்கும். இதனால், வருங்காலத்தில் தமிழ் வளர்ச்சி பாதிக்கப்படும். எனவே தமிழ் அமைப்புகள் பிரச்னையை பேசித் தீர்க்க வேண்டுமே தவிர, மோதித் தீர்க்கக்கூடாது.
புதுவையில் கம்பன் விழாவை அரசு விழாவாக நடத்திய பெருமை புலவர் அருணகிரி, பெரியவர் கோவிந்தசாமி முதலியார், முருகேசன் ஆகிய மூவரையும் சாரும். புதுவை கம்பன் கழகத்துக்கு முருகேசன் ஆற்றிய பணியானது அளப்பரியது.
இலக்கிய விழாக்களுக்கு புதுவையைப் போல தமிழகத்திலும் அரசு நிதியுதவி அளிக்கவேண்டும். இலக்கிய அமைப்புகள் கூடி விவாதிக்கவும், கூட்டம் நடத்தவும் இலவசமாக சிற்றரங்குகளை கட்டித் தர வேண்டும். தமிழ் வாழத் தமிழ் இலக்கிய அமைப்புகள் அவசியம். ஆகையால், இலக்கிய அமைப்புகளுக்கு அரசு ஆதரவு தர வேண்டும். இலக்கியப் பேச்சாளர்களுக்கு விருது தரும் அரசு, இலக்கிய அமைப்புகளுக்கு விருது தருவதில்லை. அவர்களுக்குத்தான் கம்பன், வள்ளுவன், பாரதி, பாரதிதாசன் ஆகியோரின் பெயரில் வழங்கப்படும் விருதுகளை வழங்கி கெளரவிக்க வேண்டும் என்றார் தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன்.
நிகழ்ச்சிக்கு, கம்பன் கழகத் தலைவர் பழ. பழனியப்பன் வரவேற்றார். இதில், துணைத் தலைவர் மாணிக்கவேல், கவிஞர் அப்பாச்சி சபாபதி, சரவணச்செல்வன், வித்யாலட்சுமி ஆகியோர் பேசினர். பேராசிரியர் மா. சிதம்பரம் நன்றி கூறினார்.

திருமிகு பர்வீன் சுல்தான அவர்களின் கம்ப கவிதை பற்றிய பேச்சு - செய்தி - நன்றி - தினமணி

அன்பை வலியுறுத்தும் காவியமே கம்ப ராமாயணம்:பேராசிரியை பர்வீன் சுல்தானா

First Published : 04 October 2015 04:35 AM IST
அன்பையும், பாசத்தையும் வலியுறுத்தும் காவியமாக கம்ப ராமாயணம் உள்ளது என, கல்லூரி பேராசிரியை இ.சா.பர்வீன் சுல்தானா தெரிவித்தார்.
காரைக்குடி கம்பன் கழகத்தின் 60-ஆம் மாதக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. இதில், கம்ப (க)விதை எனும் தலைப்பில் அவர் பேசியதாவது:
தமிழர் பாரம்பரியத்தில் வீட்டின் நிலைக் கதவு வைக்கும்போதும், கோபுரக் கலசங்களிலும் விதையை வைப்பது வழக்கம். உலகின் கடைசி உயிர் வாழ்வதற்குரிய உணவை விதையாக விட்டுச்செல்லும் மரபு, தமிழர்களுக்கு மட்டுமே உரித்தானது.
இலக்கியவாதிகள் சமூகத்தில் ரசவாத மாற்றத்தை ஏற்படுத்திட முடியுமா என்றால், முடியும் என்பதற்கு கம்பரும், பாரதியும், பாரதிதாசனும் எடுத்துக்காட்டாக உள்ளனர். விதைத்தவன் தூங்கலாம், விதைகள் தூங்காது.
சொல்லில் உள்பொருளை பொதித்து வைப்பதற்கே கம்ப சூத்திரம் எனப் பொருள். கயிற்றில் மஞ்சள் தடவி பெண்கள் கழுத்தில் அணிந்தால் தாலியாகிவிடும். அதுபோலவே கம்பரும் தனது கவிதையில் சூத்திரத்தை விட்டுச் சென்றுள்ளார்.
கம்பரின் கவிதையைப் படித்தால் நமக்குள் பெரும் மாற்றம் நிகழும். கம்பரின் பாட்டிலே எல்லையற்ற பொருள் இருப்பதை பாரதி உணர்த்துகிறார். எனவே, உள்பொருள் விதையைத் தேடி வருங்காலத் தலைமுறைக்காக விதைப்பது அவசியம்.
கம்பர் ஒரு பாத்திரத்தைப் படைக்கும்போது, அவரை ஆட்கொண்டுவிடும். பின்னர், அதில் கம்பர் வெற்றி கொண்டு தனது கருத்தை கூறுவார். தாடகை வதத்தில், ராமர் வில் முதன்முதலாக புறப்பட்டதை சொல்லுக்கு இணையாக கம்பர் கூறுகிறார். தாடகை மீது அம்பு ஊடுருவிச் செல்வதை கல் மீது ஊடுருவுவதாக உருவகப்படுத்துகிறார்.
வாலி வதையின்போது, வாழைப்பழத்தில் ஏற்றப்பட்ட ஊசி போல அம்பு பாய்ந்து நின்றதாகக் கூறுகிறார். ராமரின் அம்பு கல் போன்ற தாடகை உடலை துளைத்துச் சென்றதால் அது வதம். ஆனால், பழம் போன்ற வாலி நெஞ்சில் குத்தி நின்றதால் அது முக்தியானது. கம்பரின் அனைத்து கதாபாத்திரங்களும் அவ்வப்போது வெளிப்படும்போது நம்மால் உணரமுடியும். கம்ப ராமாயணத்தில் அன்பை வலியுறுத்தும் வகையிலேயே தாய், மகன், சகோதரன், தங்கை, மனைவி, கணவர் என அனைத்துப் பாத்திரங்களையும் கம்பர் படைத்திருக்கிறார்.
அன்பால் ஈர்த்தல் என்பதே புத்திசாலித்தனம். நன்றியோடிருப்பவர்க்கு இயற்கை உதவும் என்பதை கம்பர் வலியுறுத்துகிறார். அன்புக்குரிய சக்தியை கம்ப ராமாயணம் அளித்து, நம்மை அறிவுறுத்தி, வழிநடத்துகிறது என்றார்.

தினமணியில் திரு, பழ. கருப்பையா அவர்கள் எழுதிய கம்பன் கழகம் குறித்த கட்டுரை

சொத்து, சாத்தானின் வாயில்!

First Published : 07 October 2015 01:11 AM IST
'காரைக்குடியில் கம்பன் கழகம் உடைந்து விட்டதே ஏன்?' என்று பரவலாகக் கேள்வி எழுப்பப்படுகிறது. இதற்கு ஒரே வார்த்தை பதில்- "சொத்து'.
 சாத்தான் நுழைவதற்கு வாயிலை அகலத் திறந்து வைப்பதே சொத்துத்தான்!
 "மூன்று நாட்கள் கம்பன் விழா நடத்துவதற்கு எதற்கு இவ்வளவு பெரிய சொத்து?' என்று சா. கணேசனிடம் கேட்டேன். அவர் பெரிய தியாகி; காந்தியைப் போல் சட்டை அணியாதவர்; தன்னலமற்றவர்; உறுதியானவர்!
 பெரியார் இராமாயணத்தை ஒழிக்க எதிர்ப்பியக்கம் கண்டு, அது திராவிட மாட்சிமைக்கு மாறானது என்று வரிந்து கட்டிக் கொண்டு நின்றபோது, "கம்பன் காக்கப்பட வேண்டும்' என எதிர்நிலை கண்டவர் சா. கணேசன்!
 வால்மீகி இராமாயணம்தான் மூலம் எனினும், கதையை மட்டும் பெற்றுக் கொண்டு, கம்பன் திராவிடக் கூறுகளை உட்படுத்தி அந்தக் காப்பியத்தைத் தன் போக்கிற்குச் செழுமைப்படுத்தியவன்!
 கண்ணகிக்குப் பாஞ்சாலிதான் மாறுபட்டவளே ஒழிய, சீதை அல்லள்!
 கம்பனை நீக்கி விட்டால், தமிழில் பாதி நீங்கி விடும் என்பதால், தான் நடத்திய விழாவுக்குப் பக்தி சார்ந்து இராமாயண விழா என்று பெயரிடாமல் இலக்கியம் சார்ந்து "கம்பன் விழா' என்று பெயரிட்டார் சா. கணேசன்!
 வால்மீகியின் இராமனைவிட கம்பனின் இராமன் மேம்பட்டவன் என்று கருதியதால், தன்னுடைய பேரனுக்கு இராமன் என்று மொட்டையாகப் பெயரிடாமல் "கம்பராமன்' என்று துல்லியமாகப் பெயரிட்டார் அவர்!
 இது பெரியாரோடு கூடவே நடந்தும், பெரியாரை விட்டு விலகியும் கம்பனை நிலைநிறுத்திய கூரறிவு!
 இவ்வளவு பெரிய சா. கணேசனிடம், "கீற்றுக் கொட்டகையில் நடத்தினால் கம்பன் நிற்க மாட்டானா? எதற்கு இவ்வளவு பெரிய சொத்து?' என்று கேட்டேன்! கம்பன் மண்டப விரிவுக்குப் பல நோக்கங்கள் உண்டென்றாலும், அதற்கொரு நிலையான வருவாயைத் தேடி வைக்க வேண்டும்; அந்த வருவாயிலேயே கம்பன் விழாவைக் காலகாலத்திற்கும் நடத்த வேண்டும் என்பதுதான் அவருடைய மண்டப உருவாக்கத்தின் மைய நோக்கம்!
 "தருமம் கூடத் தனக்குரிய வருவாயைத் தன்னிடமிருந்தே உருவாக்கிக் கொண்டு நீடித்து நடக்க வேண்டும் என்னும் ஒரு நகரத்தார் மனப்பான்மை இது'' என்று நான் கேலியாகச் சொன்னபோது, "போங்கடா... காலிப் பயல்களா' என்று என்னையும் அவருடைய சீடன் சே.நா. விசயராகவனையும் செல்லமாக வைதார் அந்தச் சட்டை போடாத தியாகி!
 எந்த ஒரு கொள்கையும் பிறக்கும்போது, தன்னை நிலைநாட்டிக் கொள்ளத் தேவையான வசதியையும் உடன்கொண்டு பிறப்பதில்லை.
 அந்தக் கொள்கை ஒரு கூட்டத்தின் நன்மைக்கு உகந்ததென்றால், அந்தக் கொள்கையால் பயன்பெறும் கூட்டம், அந்தக் கொள்கை செயல்படத் தேவையான வசதிகளை உண்டாக்கிக் கொடுத்து, அந்தக் கொள்கையை நிலைபெறச் செய்து விடும்!
 மரத்தின் நிழலால் பயன்பெறப் போகின்றவர்கள், அதைச் செடிநிலையிலிருந்து வளர்க்கத் தேவையான நீரை ஊற்றுவது போன்றதுதான் அது!
 பக்தி இயக்கக் காலத்தில் சமண - பௌத்த மோதல் நிலையில் சைவ - வைணவ சமயங்களை எடுத்து நிறுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஏற்கெனவே இருப்பவற்றை அழித்து, அந்த இடத்தில் புதியவற்றை ஊன்றுவது எளிதானதில்லை.
 ஏற்கெனவே நீலமணிமிடற்றோனையும், கார்முகில் வண்ணனையும் தமிழர்கள் அறிவார்கள் எனினும், அவர்களைச் சுற்றி நிறுவனங் கட்டுகிற முயற்சி முதன்முறையாக மேற்கொள்ளப்பட்டது.
 சமயங்கள் நிறுவனங்களாயின; சமய நெறிகளைப் பரப்புவதற்கு, அதையே வேலையாகக் கொண்ட அடியார்கள் தேவைப்பட்டார்கள். அவர்களுக்குச் சோறூட்டித் தங்க வைக்க மடங்கள் தேவைப்பட்டன. புதிய மடங்களைக் கட்டவும், அடியார்களின் பராமரிப்புக்கும் பணம் தேவைப்பட்டது. சமயப் பற்றாளர்கள் நிலங்களை மடங்களுக்குத் தானமாக வழங்கினர்!
 இன்று சைவம் என்பது ஒருவனின் பிறப்பு அடிப்படையில் தானாகவே நிலைபெற்று நிற்கிறது. அது பரப்பப்பட வேண்டிய இயக்கத் தேவையைப் பெற்றிருக்கவில்லை! இனி எதற்கு மடங்கள்?
 ஒரு மடாதிபதி தெற்கிலிருந்து வடக்கே நீண்ட தொலைவு பயணப்பட்டு ஒரு கூட்டத்திற்குப் பேச வருகிறார் என்றால், அவருக்கு முந்தி, அவர் அமர்வதற்கான வெள்ளிச் சிம்மாசனம் அதே நீண்ட தொலைவுக்குப் பயணமாகிறது. அவர் கூட்டத்தில் மற்றவர்களுக்குச் சமமாக, மற்றவர்கள் உட்காரும் நாற்காலிகளில் உட்கார மாட்டார்! இவர் கூட்டத்தில் வந்து அமர்ந்தவுடன், ஒரு வேலையாள் அந்தக் கூட்டத்தில் ஆளுயர வெள்ளிச் செங்கோலைப் பிடித்துக் கொண்டு அவருக்குப் பக்கவாட்டில் நிற்பான்! இவர் எந்த நாட்டை ஆள்கிறார்?
 சைவத்தைப் பரப்ப எழுதி வைக்கப்பட்ட சொத்துகள் எது எதற்குப் பயன்படுகின்றன என்று பாருங்கள்! அவர்கள் சட்டை போட்டுக் கொள்வதில்லை; சட்டப்படி மணந்து கொள்வதில்லை என்பவை மட்டுமே சைவத்தை வளர்க்கப் போதுமானவையா?
 திருவாசகத்தை எட்டணா விலையில் மலிவாக விற்பதற்கும், சில கோயில்களில் உழக்கரிசிச் சோற்றை நைவேத்தியமாகக் காட்டுவதற்கும் எதற்கு இத்தனை ஆயிரம் வேலி நிலங்கள்?
 வள்ளலார் எந்த மடத்திற்கு அதிபதியாக இருந்தார்? அவருடைய கட்டுப்பாட்டில் எந்த நிலம் இருந்தது?
 பசித்தவர்களுக்குச் சோறிடுவதற்காகப் பசிக்காதவர்களிடமிருந்து அரிசி பருப்பைப் பெற்றார். எளிய ஆனால் பெருமனம் படைத்த வன்னிய விவசாயிகளிடமிருந்து கொஞ்ச நிலம் பெற்றுச் சத்திய தருமச்சாலையை உருவாக்கினார்!
 பசி என்று வாயிலில் வந்து நிற்கிறவனுக்குச் சோறிட முனையும் ஒரு மனைவியைக் கணவன் தடுத்தாலும், அவளைப் படைத்த ஆண்டவனே தடுத்தாலும், அவர்களை எல்லாம் புறந்தள்ளிவிட்டுப் பசித்தவனுக்குச் சோறிட வேண்டும் என்றார் வள்ளலார்!
 "பசி என்னும் பாவிக்கு' எதிராக அவர் மூட்டிய அடுப்பு இன்றுவரை அணையாமல் எரிந்து கொண்டிருக்கிறதே! அதற்கு எத்தனை நூறு வேலி நிலம் வைத்து விட்டுப் போனார் வள்ளலார்? அந்தக் காரியம் தொடர்ந்து நடக்காமல் போய்விட்டதா?
 தனக்குப் பிறகு தன்னுடைய இடத்தில் இருந்து சொத்துத்தான் அந்தக் காரியங்களைத் தொடர்ந்து நடத்தும் என்று கொடையாளர்கள் நினைக்கிறார்கள். சொத்து என்பது சாத்தான்! உணர்வுபூர்வமாக நடக்க வேண்டிய காரியங்களைச் சடங்கு பூர்வமாக ஆக்கி, அந்தக் காரியங்களில் "சாரம் இல்லாமல்' செய்யப் போவது அந்தச் சொத்துத்தான்!
 நம்முடைய தலைமுறையின் ஈடு இணையற்ற திராவிடத் தலைவர் பெரியார். திராவிடர்கள் தன்மானம் பெறுவதற்காகக் கடவுளை ஒழிக்கவும், காந்தியை ஒழிக்கவும், ஆரியர்களை ஒழிக்கவும் முனைந்து நின்றார்! 
 இவர்கள் மூன்று தரப்பார்க்கும் பெரியாரால் எந்தச் சேதாரமாவது ஏற்பட்டதுண்டா? காந்தியை ஒழிக்கவும் காந்தியிடம் கற்றுக்கொண்ட நெறிமுறைகளையே பின்பற்றியவர் அவர்!
 ஆனால், தனக்குப் பிறகும் திராவிடர் கழகமும், தன்மான இயக்கமும் செயல்பட வேண்டும் என பெரியார் விரும்பினார். தன்னுடைய தகப்பனார் வழியில் தனக்குக் கிடைத்த பெருஞ் சொத்தையும், தான் பொது வாழ்வில் இதற்கெனச் சேர்த்த பெரும் பணத்தையும் ஓர் அறக்கட்டளையாக உருவாக்கி அதை யார் கையில் ஒப்படைப்பது என்று மருக்கடிப் பட்டு, "என் கண்ணுக்கு மணியம்மையைத் தவிர வேறு யாரும் நம்பிக்கையாகத் தெரியவில்லை' என்று தன் துணைவியாரிடமே சொத்துக்களை ஒப்படைத்தார் பெரியார்.
 மனம் புண்பட்ட அண்ணா வெளியேற நேர்ந்தது! அண்ணா தலைமையில் திராவிட இயக்கம் வீறு கொண்டது வேறு கதை!
 ஆனால், எல்லாவற்றிலும் காந்தியைப் பின்பற்றும் பெரியார், இந்த ஒன்றில் மட்டும் சைவ மடங்களைப் பின்பற்றிவிட்டார்!
 எழு நூறு ஆண்டுகளாகச் சைவ மடங்கள் நிலைபெற்று நிற்பதுபோல, திராவிடர் இயக்கமும் நிலைபெற்று நிற்க வேண்டுமென அவர் விரும்பினார்!
 திருவிளையாடற் புராணத்தை அவர்கள் மலிவாகப் பதிப்பிப்பது போல், தன்னுடைய எழுத்துகளைத் திராவிடர் கழகம் மலிவாகப் பதிப்பித்தால் போதும் என இவரும் திரண்ட சொத்துகளை இதற்கென ஒதுக்கினார்!
 ஒரு காலகட்டத்தில் சாதியால் ஏற்படும் மாபெரும் தீங்கான ஏற்றத்தாழ்வுகளை ஒழித்துத் தமிழர்களைச் சைவத்தின் பெயரால் ஒருமைப்படுத்தியவர்கள் அப்பர் அனைய சைவர்கள்தாமே!
 இன்று சைவ மடங்கள் இற்றுப் போனதற்கு என்ன காரணம்? சொத்து!
 சைவ மடங்களின் சாயலில் உருவாக்கப்பட்ட திராவிட இயக்கச் சொத்துப் பரிபாலனத்திற்கு, பெரியாருக்குப் பின்னால் வந்திருக்கும் வீரமணி, பெரியாரால் செதுக்கப்பட்டவர். திராவிட உணர்வுகளில் ஊறி வளர்ந்தவர்!
 அவருக்குப் பின்னால் பெரியார் திடலில் ஒரு மடம் உருவாகும்; அது திராவிட மடம் எனப் பெயர் பெறும்!
 "நமச்சிவாய வாழ்க' என்னும் மந்திரம் திருப்பனந்தாளில் நாள்தோறும் ஒலிப்பது போல, எழும்பூர் பெரியார் திடலில் நாள்தோறும் "கடவுளை நம்புகிறவன் முட்டாள்' என்னும் மந்திரம் ஒலிக்கும்!
 மந்திரங்கள் வேறு வேறு; செயல்பாடு ஒன்றுதானே! ஒரு இயக்கத்திற்குச் சொத்தை உருவாக்குவது சாத்தானுக்கு வரவேற்பிதழ் வாசித்துக் கொடுக்கும் செயலாகும்!
 ஒவ்வோர் அரசியல் கட்சித் தலைவரும் தனது கட்சிக்குத் தலைநகரிலிருந்து மாவட்டங்கள் மற்றும் பேரூர்கள் வரை பளிங்கு மாளிகைகளை உருவாக்கி வைத்திருக்கிறார்கள்! அவற்றையும், அவர்கள் கடைசியில் எடுத்துச் செல்ல முடியாத அளப்பரிய பணத்தையும் ஆளப் போகிறவர்கள் யார் யாரோ?
 பெரியாரை அறக்கட்டளைகள் அல்ல; காலம் தூக்கி நிறுத்தும்!
 இவ்வளவு அரசியல் குறைநிறைகளுக்கிடையே ஐம்பது ஆண்டுகளாகக் கருணாநிதியை வீழ்த்த முயன்றும் வீழ்த்த முடியவில்லையே! ஏன்?
 கருணாநிதியைத் தூக்கி நிறுத்துபவர்கள் அவருடைய தொண்டர்களில்லை; அவருடைய எதிரிகள்!
 இந்தி ஐ.நா. மன்றத்தில் ஒலிக்க வேண்டும் என்பவர்கள்; பிறப்பால் மேல்கீழ் பேசுகிறவர்கள்; சமக்கிருதம் மட்டும்தான் கடவுளுக்குப் புரியும் என்பவர்கள்; இந்துத்துவத்தால் திராவிட இன மரபை அழித்து அவர்களை இந்துக்களாக அடையாளப்படுத்த முயல்பவர்கள்; இவர்கள்தாம் முதலில் கருணாநிதியை எதிர்த்து மூர்க்கம் கொள்கிறார்கள்!
 ஒருவரின் நிலைபேற்றுக்கான இன்றியமையாமையைத் தொண்டர்கள் தீர்மானிப்பதில்லை; எதிரிகளே தீர்மானிக்கிறார்கள்!
 இதை மருத்துவர் இராமதாசு ஐயா உணரும்போது, திராவிட இயக்கத்தை ஒழிக்க நினைக்க மாட்டார்; அந்த இயக்கத்தின் எதிரிகளை ஒழிக்க நினைப்பார்! எதிரிகள் ஒழிந்து விட்ட நிலையில், அந்த இயக்கத்திற்கான தேவை அற்றுப் போகிற காரணத்தால், அந்த இயக்கம், தலைமை அனைத்துமே தேவையற்றுப் போகும்! இதுதான் திராவிடத்தை ஒழிக்க எளிய வழி!
 எந்த இயக்கமானாலும் அதைச் சொத்தால் நிலைநிறுத்த முடியாது!
 காந்தி "திலகர் சுயராச்சிய நிதியாக' ஒரு கோடி சேர்த்து விடுதலைப் போராட்டத்திற்கென அந்த நிதி முழுவதையும் செலவழித்து முடித்துவிட்டார்!
 இன்னும் பல நூறு கோடிகளைச் சேர்த்து வைத்து, அதிலிருந்து வருகின்ற வருவாயில் சுயராச்சியப் போராட்டத்தை நடத்தலாமே என்று யோசனை சொல்லப்பட்டபோது, காந்தி மறுத்துவிட்டார்!
 பணம் இல்லாத நிலையில் ஓர் இயக்கத்திற்குத் தகுதி வாய்ந்தவனின் தலைமை ஏற்படும். 
 பணமோ, சொத்தோ இருந்தால், தன்
 னல அக்கறைச் சக்திகள் எல்லாவிதத் தந்திரங்களையும் பயன்படுத்தி அந்த இயக்கத்தைக் கைப்பற்றி விடுவார்கள்; இயக்கம் தோற்றுப் போகும் என்றார் காந்தி!
 சொத்து, சாத்தான் நுழையும் வாயில்!

நன்றி தினமணி

காரைக்குடியில் அக். 3 இல் கம்பன் கழக கூட்டம்: தினமணி ஆசிரியர் பங்கேற்கிறார்

First Published : 01 October 2015 05:26 AM IST
காரைக்குடியில் உள்ள கம்பன் கழகத்தின் 60 ஆம் மாதக் கூட்டம் சனிக்கிழமை (அக். 3) நடைபெற உள்ளது.
 கல்லுக்கட்டி மேற்கு கிருஷ்ணன் கோயிலை அடுத்துள்ள கிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் மாலை 6 மணிக்கு நடைபெற உள்ள இந்த கூட்டத்தில், தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன் தலைமையேற்று, புதுச்சேரி கம்பன் கழகச் செயலர் தி. முருகேசனுக்கு புகழாரம் சூட்டிப் பேசுகிறார்.
நிகழ்ச்சியில், கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன் வரவேற்கிறார். கம்ப (க) விதை என்ற பொருளில் சென்னையில் உள்ள நீதிபதி பசீர் அகமது சையது மகளிர் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர் இ.சா. பர்வீன் சுல்தானா பேசுகிறார். பேராசிரியர் மா. சிதம்பரம் நன்றி கூறுகிறார்.  கூட்டத்துக்கான ஏற்பாடுகளை பழ. பழனியப்பன் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

அக்டோபர் மாத காரைக்குடி கம்பன் கழக மாதக் கூட்டம்.




காரைக்குடி கம்பன் கழகத்தின் சார்பில் நடைபெற்ற மாதக் கூட்டத்தில் கம்பன்அடிசூடி பழ.பழநியப்பன், தினமணி ஆசிரியர் திரு. வைத்தியநாதன், காரைக்குடி கம்பன் கழக துணைத்தலைவர் அரு,வே. மாணிக்கவேலு ஆகியோர் பங்கேற்றனர்.
தினமணி ஆசிரியர் இலக்கிய அமைப்புகள் வளமும் நலமும் பெற வேண்டும் என்று கருத்துரைத்தார். இலக்கிய அமைப்புகளுக்குள் ஒற்றுமை வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அமரர் பாண்டிச்சேரி கம்பன் கழகச் செயலர் முருகேசன் அவர்களின் நினைவைப் போற்றினார்.
கம்பகவிதை பற்றி திருமிகு பர்வீன் சுல்தானா உரையாற்றினார்.