Saturday, October 10, 2015

நன்றி தினமணி

காரைக்குடியில் அக். 3 இல் கம்பன் கழக கூட்டம்: தினமணி ஆசிரியர் பங்கேற்கிறார்

First Published : 01 October 2015 05:26 AM IST
காரைக்குடியில் உள்ள கம்பன் கழகத்தின் 60 ஆம் மாதக் கூட்டம் சனிக்கிழமை (அக். 3) நடைபெற உள்ளது.
 கல்லுக்கட்டி மேற்கு கிருஷ்ணன் கோயிலை அடுத்துள்ள கிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் மாலை 6 மணிக்கு நடைபெற உள்ள இந்த கூட்டத்தில், தினமணி ஆசிரியர் கே. வைத்தியநாதன் தலைமையேற்று, புதுச்சேரி கம்பன் கழகச் செயலர் தி. முருகேசனுக்கு புகழாரம் சூட்டிப் பேசுகிறார்.
நிகழ்ச்சியில், கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன் வரவேற்கிறார். கம்ப (க) விதை என்ற பொருளில் சென்னையில் உள்ள நீதிபதி பசீர் அகமது சையது மகளிர் கல்லூரியின் தமிழ்ப் பேராசிரியர் இ.சா. பர்வீன் சுல்தானா பேசுகிறார். பேராசிரியர் மா. சிதம்பரம் நன்றி கூறுகிறார்.  கூட்டத்துக்கான ஏற்பாடுகளை பழ. பழனியப்பன் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

No comments :

Post a Comment