Wednesday, August 24, 2016

செப்டம்பர்கம்பன் திருவிழா 2016

அன்புடையீர்
வணக்கம்
வழக்கம்போல இம்மாதக் கம்பன் திருவிழா செப்டம்பர் 3 ஆம் தேதி நடைபெற உள்ளது. அனைவரும் வருக. இதனுடன் அழைப்பிதழை இணைத்துள்ளோம
கம்பன் கழகம், காரைக்குடி
(புரவலர் திரு. எம்.ஏ.எம். ஆர். முத்தையா (எ) ஐயப்பன் செட்டிநாடு குழுமம்)
அன்புடையீர்
வணக்கம். கம்பன் புகழ் பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும் தாய்க் கம்பன் கழக செப்டம்பர் மாதக் கம்பன் திருவிழா கவியரங்கமாக 3-9-2016 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 6.00 மணிக்குக் கல்லுக்கட்டி மேற்கு கிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் நடைபெறுகிறது.
இறைவணக்கம் -
கீழப்பூங்குடி செல்வி கவிதா மணிகண்டன்
வரவேற்புரை –
முனைவர் மு.பழனியப்பன்
தோரணவாயில் -
கவிச்சக்கரவர்த்தி காப்பியக் கவிஞர் நா. மீனவன்
கவியரங்கம்
தலைவர்
கவிஞர் வீ.கே. கஸ்தூரி நாதன், குழிபிறை
தலைப்பு – கம்பன்
என் தோழன் -
கவிஞர் ஆர்.எம்.வி. கதிரேசன்
என் காதலன் -
கவிஞர் :ஆர். இராஜேந்திரன்
திருகோகர்ணம்
என் சற்குரு
கவிஞர் புத்திரசிகாமணி சேந்தன் குடி
என் தெய்வம் -
கவிஞர் கா. நாகப்பன், காரைக்குடி
சுவைஞர்கள் கவியுரையாடல்
நன்றியுரை திரு கம்பன் அடிசூடி
சிற்றுண்டி
கம்பன் புகழ் பருகிக் கன்னித்தமிழ் வளர்க்க அன்பர்கள் யாவரும் வருக
நன்றி
கம்பன் தமிழமுது பருக வரவேற்கும் அரு. வே. மாணிக்கவேலு, சரசுவதி அறக்கட்டளை
அன்னை மெடிக்கல்ஸ், பொன்னமராவதி
செட்டிநாடு பரோபகார நிறுவனத்தின் சிகப்பி இல்லம்
பிள்ளையார்பட்டி குன்றக்குடி இரு தலங்களுக்கும் இடையில்
மூத்தோர் இல்லம் (9941817777)
நமது செட்டிநாடு இதழுக்குப் பல்லாண்டு


Monday, August 15, 2016

ஆடி மாத ஆன்மீக இலக்கிய நிகழ்ச்சி

காரைக்குடி கம்பன் கழகமும், கிருஷ்ணா கல்யாண மண்டபமும் இணைந்து, ஆடி மாத ஆன்மீக இலக்கிய நிகழ்ச்சியை ஒரு வாரம் நடத்தின. கடந்த ஆறாம் தேதி முதல் நடைபெற்ற இவ்விழாவில் முதல்நாள் (6.8.2016)  இராமனின் எவ்வண்ணம் செம்மை சேர் வண்ணம் எவ்வண்ணம் என்ற தலைப்பில் பட்டிமண்டபம் நடைபெற்றது. இதற்குப் பேராசிரியர் பாகை கண்ணதாசன் அவர்கள் தலைமையேற்றார். கைவண்ணம் என்ற அணியில் புவலர் பாரதிதாசன், முனைவர் பாரதி அழகப்பன் ஆகியோர் வாதிட்டனர். கால்வண்ணம் என்ற அணியில்  புலவர் அழ. பூபதி, கவிஞர் ஜோதி சுந்தரேசன் ஆகியோர் வாதிட்டனர். இதனைத் தொடர்ந்து 7.8.2016 அன்று சேக்கிழார் என்ற தலைப்பில் மதுரை, பேராசிரியர் யாழ்.சு சந்திரா அவர்கள் உரையாற்றினார். 8.8.2016 ஆம் நாளன்று, கவிஞர் பெர்னாட்ஷா சுந்தரர் என்ற தலைப்பில் பேசினார். 9,8,2016 அன்று பேராசிரியர் பழ. முத்தப்பன் அவர்கள் மாணிக்கவாசகர் பற்றிப் பேசினார். அன்று உறையூர் திருவாதவூரார் திருவாசக முற்றோதல் குழவினாரால் திருவாசகம் இசைக்கப்பெற்றது. 10.8.2016 அன்று கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன் அவர்கள் ஞானசம்பந்தர் என்ற தலைப்பில் உரையாற்றினார். 11.8.2016 அன்று காசி-ஸ்ரீ அரு. சோமசுந்தரம் அவர்கள் திருநாவுக்கரசர் பற்றி உரை நிகழ்த்தினார். 12.8.2016 அன்று பேராசிரியர் செந்தமிழ்ப்பாவை அவர்கள் ஆண்டாள் பற்றி உரை நிகழ்த்தினார். நாள்தோறும் திருமுறை, நாலாயிரப் பாடல்களைவ செல்வி கவிதா, திருமதி வள்ளி பாலகிருஷ்ணன் ஆகியோர் இசைத்தனர்.



Friday, August 5, 2016

ஆடியில் ஒரு வாரம் இலக்கியம்


ஆடித்தள்ளுபடி துணிகளுக்கு உண்டு. ஆடியில் பிறர் மனம் கொள்ளும்படி ஒரு வாரம் இலக்கிய நிகழ்வுகளை நடத்தும் எண்ணம் காரைக்குடி கம்பன் கழகத்திற்கு ஏற்பட்டதன் விளைவு இது. அழைப்பினை ஏற்று அனைவரும் வருக.