Wednesday, April 29, 2020

பேச்சாளர்களுக்கு ஒரு வாய்ப்பு

கம்பன் கழகம், காரைக்குடி
பேச்சாளர்களுக்கு ஒரு வாய்ப்பு
படலம் ஒன்று! பேச்சு ஒன்று-!!
பேச்சுக் கலைஞர்களே! வணக்கங்கள்.
காரைக்குடி கம்பன் கழகத்தின் சார்பில் கம்பராமாயணத்தைப் பேச்சுரைகளாக அளிக்க விரும்புகிறோம். முதல் முயற்சியாக பாலகாண்டத்தின் படலங்களைப் பேச்சுரைகளாக அளிக்க விரும்புகிறோம். 23 பேச்சாளர்கள் தேவை
பாலகாண்டத்தின் படலங்கள் பேச்சாளருக்கு ஒன்று என்ற அடிப்படையில் எடுத்துக்கொள்ளலாம்.
அவ்வாறு எடுத்துக் கொண்ட படலத்தின் செய்திகளை இருபது நிமிடங்களில் காணொளிப் பேச்சாகத் தாங்கள் அளிக்கவேண்டும். இப்பேச்சுரைக்குள் படலச் செய்திகள் முழுமையும் வரவேண்டும். ஒன்று அல்லது இரண்டு பாடல்களை மையமாக வைத்து முன்னும் பின்னுமாக படலத்தின் செய்திகளை நீங்கள் வழங்கவேண்டும். பேச்சினைத் தொடங்குகையில் காண்டம் மற்றும் படலத்தின் பெயரைச் சொல்லுங்கள். பாத்திரங்கள் பற்றிய விமர்சனங்கள் வேண்டாம். படலப் பொருள் போதும். விவாதம் வேண்டாம்
.
இதற்கான ஒப்புதலை 3-5-2019 ஆம் தேதிக்குள் நீங்கள் வழங்கினால் பெயர்ப்பட்டியல் தயாரிக்கப்படும். இதனடிப்படையில் தாங்கள் யுடியுப் சானலில் தங்கள் காணொளியைப் பதிவு செய்து அந்த தொடுப்பை எங்களுக்கு வழங்கலாம். அந்தத் தொடுப்புகளை தொடுத்து, பாலகாண்டப் பேச்சுரையாக வழங்கத்திட்டம்.
தாங்கள் இப்போது செய்ய வேண்டியது எங்களுக்கு ஒப்ப்புதல் தரவேண்டியதுதான். படலத்தின் பெயரை நாங்கள் உங்களுக்குச் சொல்லி உங்களை எங்களின் குழுவோடு இணைத்துக்கொள்கிறோம். அடுத்த ஒரு வாரத்திற்குள் தங்களின் பேச்சுரை எங்களை வந்துசேரவெண்டும்.
அதன்பின் 10.5.2020 க்குள் பேச்சுரைத் தொகுப்பினை காரைக்குடி கம்பன் கழகம் வெளியிட வாய்ப்பு உள்ளது. தங்கள் தொகுப்பினை எங்கள் பொக்கிஷமாகப் பாதுகாப்போம். இந்தச் சிறுமுயற்சிக்குத் தங்களின் மேலான ஒத்துழைப்பு தேவை.
இதுகுறித்த கருத்துக்களை, விமர்சனங்களை, வழிகாட்டுதல்களை எதிர்பார்க்கிறோம். நன்றிகள்
கம்பன் புகழ்பாடிக் கன்னித்தமிழ் வளர்ப்போம்.
கம்பன் வாழ்க! கம்பன் புகழ் வாழ்க!! கன்னித்தமிழ் வாழ்க. !!
இவண்
பணிவன்புள்ள
கம்பன் கழகத்தார் , காரைக்குடி
தொடர்பிற்கு 9442913985
muappalam2006@gmail.com
கம்பராமாயணம் - பால காண்டம்
படலங்களின் பெயர்கள் பின்வருமாறு.
0. கடவுள் வாழ்த்து
1. ஆற்றுப்படலம்
2. நாட்டுப்படலம்
3. நகரப்படலம்
4. அரசியற் படலம்
5. திரு அவதாரப் படலம்
6. கையடைப் படலம்
7. தாடகை வதைப் படலம்
8. வேள்விப் படலம்
9. அகலிகைப் படலம்
10. மிதிலைக்காட்சிப் படலம்
11. கைக்கிளைப் படலம்
12. வரலாற்றுப் படலம்
13. கார்முகப் படலம்
14. எழுச்சிப் படலம்
15. சந்திரசயிலப் படலம்
16. வரைக்காட்சிப் படலம்
17. பூக்கொய் படலம்
18. நீர்விளையாட்டுப் படலம்
19. உண்டாட்டுப் படலம்
20. எதிர்கொள் படலம்
21. உலாவியற் படலம்
22. கோலம்காண் படலம்
23. கடிமணப் படலம்
24. பரசுராமப் படலம்

காரைக்குடி கம்பன் கழகத்தின் கண்ணீர் அஞ்சலி


கம்பன் அடிப்பொடி ஐயா சா. கணேசன் அவர்களோடு கரம் கோர்த்து கம்பன் விழாவை நடத்தியோர் பலர். பொருளாலும், செயலாலும் கம்பன் தமிழ் தழைக்க உழைத்தோர் பலர்.
அவருள்ளும் ஒருவர்
திரு. லெ. கணேசன் என்ற பெரியவர்.
கம்பன் மேடையில் ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக காலக்கணக்கினைக் கணக்கிடும் அரிய பணியைக் கம்பன் அடிப்பொடியார் காலத்திலும் அதற்குப் பின்பும் செய்து வந்தவர்.
இவரன்றி மேடையில் சிவப்பு விளக்கு எரியாது. இவரே அதன் இயக்குநர். சரியான நேரத்தில் சரியாக நேர வரையறை செய்த பெருந்தகை. இவரைக் கண்டால் அனைவரும் சிவப்பு விளக்கும் இவரது நேரக்கட்டுப்பாடும் நினைவிற்கு வரும். அயராது பணி செய்த அவரின் பணி பாராட்டுக்கு உரியது.
இலக்கிய மேடையைக் காலத்தால் கணித்த அவர் நேற்று (28-4-2020) இயற்கை எய்தினார். காரைக்குடி கம்பன் கழகம் அவரின் தன்னேரிலாப் பணிக்குத் தலை சாய்த்து நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது. காலக் கட்டுப்பாட்டாளருக்கே காலம் கட்டுப்பாட்டை விதிக்கிறது.
அன்னாரின் இறுதிச்சடங்குகள் அவரின் இல்லத்தில் (அண்ணாமலை விலாஸ்
மேலமடம் காரைக்குடி) இன்று மதியம் நடைபெறுகிறது. அவரின் இழப்பில் வாடும் குடும்பத்தாருக்கு எம் ஆழ்ந்த இரங்கல்கள்.

Tuesday, April 7, 2020

கவிச்சக்கரவர்த்தி கம்பரைப் போற்றும் நாள்.

படத்தைப் பற்றிய குறிப்பு இல்லை.

கம்பன்  வாழ்க
கம்பன் புகழ் வாழ்க
கன்னித் தமிழ் வாழ்க
7-4-2020
இன்று பங்குனி  அத்தத் திருநாள்

இன்றைக்கு நாட்டரசன் கோட்டையில் காரைக்குடி கம்பன் கழகத்தினரால் 
கம்பன் அருட்கோயிலில் வழிபாடு நிகழ்த்தப்பெற்றது. ஆண்டுதோறும் கம்பன்  
அடிப்பொடி திரு சா. கணேசனார் அவர்கள்  காட்டிய வழியல் இவ்வழிபாடு 
நடத்தப்பெற்று வருகிறது. 
 திரு கரிகாலன் பொறுப்பேற்று இதனை நடத்தினார்கள்.அவர்களுக்கும் 
பூசனை செய்த திரு காசி விசுவநாதன் உள்ளிட்ட பூசனையாளர்களுக்கும் நன்றிகள்.

படம் இதைக் கொண்டிருக்கலாம்: ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள், பலர் நின்றுக்கொண்டிருக்கின்றனர் மற்றும் உட்புறம்


கம்பன் அருட்கோயிலில் வழிபாடு