Sunday, March 20, 2016

இரு கம்பன் நிகழ்வுகளையும் ஒருங்கிணைத்துள்ளது தி இந்து நாளிதழ்


KARAIKUDI, March 18, 2016

Annual Kamban festival from March 21

Kamban Academy and Kamban Trust have lined up a galaxy of poets, scholars and politicians to eulogise Kamban, the emperor of poets who authored ‘Kamba Ramayanam’, the 12th century Tamil epic, during the four-day annual Kamban festival to be organised here from March 21.

Kamban Academy, led by its secretary Pala. Palaniappan, is organising ‘Kamban Thiruvizha’ at Krishna Kalyana Mandapam, and Kamban Trust, led by its president Sakthi A. Thirunavukarasu, is organising ‘Kamban Thirunal’ at Kamban Manimandapam from March 21. Kamban Academy has lined up guests such as Civil Servant U. Sagayam, former Union Minister E.M. Sudarasana Natchiappan, DMK Rajya Sabha member and poetess Kanimozhi, expelled AIADMK MLA Pazha. Karuppaiah, Tamil scholar Nellai Kannan and poetess Salma to talk on different aspects of ‘Kamba Ramayanam’ and Kamban.

Mr. Sagayam would deliver the presidential address on the inaugural day after releasing books and distributing awards along with Valli Muthiah, the poetess from the family of philanthropist Algappa Chettiyar, said ‘Kamban Adisudi’ Palaniappan.

‘Kamban Thirunal’ has invited industrialists A.C. Muthiah to address the inaugural ceremony to be chaired by former Supreme Court Judge A.R. Lakshmanan. Lyricist and poet Vairamuthu would deliver an address on ‘Kamban, a poet’ on March 22, Mr. Thirunavukarasu said.

Popular Tamil scholar and television ‘pattimandram’ moderator Salamon Pappaiah would chair a debate on ‘Kamban’ on March 23 and the festival would draw to a close on March 24 with special addresses by Tamil scholar Kundrakudi Ponnambala Adigalar and BJP leader H. Raja, he said.

Tuesday, March 15, 2016

கம்பன் திருவிழா நிகழ்ச்சி நிரல் தினமணி நாளிதழில் வெளிவந்தள்ளது.

காரைக்குடியில் மார்ச் 21 இல் கம்பன் திருவிழா தொடக்கம்

First Published : 16 March 2016 05:31 AM IST
காரைக்குடி கம்பன் கழகம் சார்பில், இந்தாண்டுக்கான கம்பன் திருவிழா கல்லுக்கட்டிப் பகுதியில் உள்ள கிருஷ்ணா திருமண மண்டபத்தில் மார்ச் 21ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரையும்,  மார்ச் 24ஆம் தேதி நாட்டரசன்கோட்டை கம்பன் அருட்கோயிலிலும் நடைபெற உள்ளதாக, காரைக்குடி கம்பன் கழகச் செயலர் பழ. பழனியப்பன் தெரிவித்துள்ளார். 
  இது குறித்து, அவர் மேலும் தெரிவித்ததாவது: மார்ச் 21ஆம் தேதி மாலை 5 மணியளவில், கம்பன் திருவிழா தொடங்குகிறது.
  விழாவில், தமிழக அரசு அறிவியல் நகரத் துணைத் தலைவர் உ. சகாயம் தலைமை வகிக்கிறார்.
  கம்பன் கழகச் செயலர் கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன் வரவேற்றுப் பேசுகிறார்.
   பேராசிரியர் தி.மு. அப்துல் காதர் தொடக்க உரையாற்றுகிறார். இசைத் தமிழறிஞர் அரிமளம் சு. பத்மநாபன் எழுதிய கம்பனில் இசைத் தமிழ் என்ற நூலை, மதுரை தியாகராஜர் கல்லூரிச் செயலர் ஹரி தியாகராஜன் வெளியிடுகிறார்.
  பொன் விழா கொண்டாடிய புதுச்சேரி கம்பன் கழகச் செயலர் வி.பி. சிவக்கொழுந்துவுக்கு கம்ப வள்ளல் விருதை, மதுரை கம்பன் கழகத் துணைத் தலைவர் சங்கர சீத்தாராமன் வழங்கிப் பேசுகிறார். கோவை கம்பன் கழகத் துணைச் செயலர் க. முருகேசன் எழுதிய தெய்வமும் மகனும் என்ற நூலையும், பேராசிரியர் சொ. சேதுபதி எழுதிய காரைக்குடியில் ஜீவா என்ற நூலையும், சென்னை உயர் நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் த. ராமலிங்கம் வெளியிடுகிறார்.
  கம்பன் கழகம் சார்பில், அந்தமான் தீவில் வரும் ஏப்ரல் மாதம் கூட்டப்படவுள்ள மூன்றாம் உலகத் தமிழ் கருத்தரங்கத்துக்கான செய்தி விழா மடலை, செட்டிநாடு சிமெண்ட்ஸ் இயக்குநரும், நமது செட்டிநாடு இதழ் புரவலருமான ராஜாமணி முத்துக்கணேசன் வெளியிடுகிறார்.
  கோவிலூர் ஆதீனகர்த்தர் மெய்யப்ப ஞானதேசிக சுவாமிகளுக்கு அவரது கல்விப் பணிகளைப் பாராட்டி, கம்பன் அடிப்பொடி விருதை மனிதத் தேனீ  இரா. சொக்கலிங்கம் வழங்கிப் பேசுகிறார்.
  இதில், பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவ, மாணவியர்களுக்கு கவிஞர் வள்ளி முத்தையா பரிசு வழங்குகிறார்.
  இரண்டாம் நாள் நிகழ்ச்சியில், எம். கவிதா தமிழிசை வழங்குகிறார்.
  தொடர்ந்து, பேராசிரியர் த. ராமலிங்கம் கம்பனில் மறக்க முடியாதது என்ற தலைப்பிலும், கம்பனில் மறக்கக் கூடாதது என்ற தலைப்பில் பழ. கருப்பையாவும் பேசுகின்றனர்.
  தமிழ் வெள்ளம் என்ற பொருளில் நடைபெறும் கவியரங்கத்தை மாநிலங்களவை உறுப்பினர் கனிமொழி தொடக்கி வைத்துப் பேசுகிறார். இதில், சொற்கடல்
என்ற தலைப்பில் கவிதாயினி ருக்மணி பன்னீர்செல்வமும், சுவை ஊற்று என்ற தலைப்பில் கவிதாயினி சல்மாவும் கவிதை வழங்குகின்றனர்.
  மூன்றாம் நாள் நிகழ்ச்சியில், எவர் சந்திப்பில் கம்பன் பெரிதும் வெற்றி கொண்டு வெளிப்படுகின்றார் என்ற தலைப்பில், பட்டிமன்றம் நடைபெறுகிறது. இதற்கு, நடுவராக நெல்லைக் கண்ணன் செயல்படுகிறார்.
  நாட்டரசன்கோட்டையில் கம்பன் அருட்கோயிலில் நடைபெறும் நான்காம் நாள் நிகழ்ச்சியில், லெட்சுமி கிருஷ்ணமூர்த்தி, ராதா ஜானகிராமன் ஆகியோர் மலர் வணக்கம் பாடுகின்றனர், டாக்டர் இ.எம். சுதர்சன நாச்சியப்பன் எம்.பி. தலைமை வகித்துப் பேசுகிறார்.
  திருச்சி கலைக் காவரிக் குழுவினர் கம்பன் அருட்கவி ஐந்து வழங்குகின்றனர்.
   விழாவில், கண. சுந்தர் வரவேற்றுப் பேசுகிறார். கம்பன் கலை நகைச்சுவை என்ற தலைப்பில் முனைவர் இளசை சுந்தரம் சிறப்புரையாற்றுகிறார்.
 முடிவில், பேராசிரியர் மு. பழனியப்பன் நன்றி கூறுகிறார் என்றார்

Friday, March 11, 2016

கம்பன் திருவிழா 2016 அழைப்பிதழ் - வல்லமையில் வெளியிடப்பெற்ற பகுதி

காரைக்குடி – 2016 ஆம் ஆண்டு கம்பன் திருவிழா

காரைக்குடி கம்பன் கழகத்தின் 2016 ஆம் ஆண்டு கம்பன் திருவிழா

காரைக்குடி, கல்லுக்கட்டி கிருஷ்ணா திருமண மண்டபத்தில்
வரும் 21.3.2016 முதல் 23.3.2016 வரை நடை பெற உள்ளது.
24.03.2016 அன்று கம்பன் அருட்கோயில் (கம்பர் சமாதி)
உள்ள ஊரான நாட்டரசன் கோட்டையில் நடைபெற உள்ளது.
அனைவரும் வருக. அழைப்பிதழ் விபரம் பின்வருமாறு
காரைக்குடி கம்பன் கழக நிகழ்ச்சி நிரல் (2016)
____________________________________
21.3.2016 
திங்கட்கிழமை மாலை 5.00 மணி திருவிழா மங்கலம்
____________________________________
தலைவர்- தமிழக அரசு அறிவியல் நகரத் துணைத்தலைவர்
திரு. உ. சகாயம் . இ. ஆ.ப. அவர்கள்
இறைவணக்கம்- திருமதி லட்சுமி கிருஷ்ணமூர்த்தி,
மலர் வணக்கம் – திருமதி ராதா ஜானகிராமன்
கம்பன் அடிப்பொடி அஞ்சலி – செல்வி எம். கவிதா
கம்பன் அருட்கவி ஐந்து- திருச்சிராப்பள்ளி கலைக்காவிரி நுண்கலைக்
கல்லூரி மாணவ மாணவியர்
வரவேற்புரை- திரு கம்பன் அடிசூடி
தொடக்கவுரை- பேராசிரியர் தி, மு. அப்துல் காதர்
இசைத்தமிழறிஞர் திரு அரிமளம் சு. பத்மநாபன் எழுதி உமா பதிப்பகம் வெளியிடும் மீனாட்சி பழனியப்பா அறக்கட்டளைச் சொற்பொழிவு நூல் கம்பனில் இசைத் தமிழ் வெளியீடு
மதுரை தியாகராசர் கல்லூரி செயலர் திரு. ஹரி தியாகராஜன்
பொன்விழா கொண்டாடிய புதுச் சேரி கம்பன் கழகத்தின் செயலாளர் திரு. வி.பி சிவக்கொழுந்து அவர்களுக்குக் கம்ப வள்ளல் விருது வழங்கிப் பாராட்டு
மதுரை கம்பன் கழகத் துணைத்தலைவர் திரு சங்கர சீதாராமன்
கோவை கம்பன் கழகத் துணைச் செயலாளர் பேராசிரியர் க. முருகேசன் எழுதிய தெய்வமும் மகனும் நூல் வெளியீடு
பேராசிரியர் சொ. சேதுபதி எழுதிய கரைக்குடியில் ஜீவா என்ற நூல் வெளியீடு
சென்னை உயர்நீதி மன்ற மூத்த வழக்கறிஞர் திரு. த. இராமலிங்கம்
அந்தமான் தீவில் கம்பன் கழகம் 2016 ஏப்ரலில் கூட்டும் மூன்றாம் உலகத் தமிழ்க்கருத்தரங்கச் செய்தி விழா மடல் வெளியீடு – செட்டிநாடு சிமெண்ட்ஸ் இயக்குநர், நமது செட்டிநாடு இதழ் புரவலர் திரு இராஜாமணி முத்துக்கணேசன்
கோவிலூர் ஆதீன கர்த்தர் திருப்பெருந்திரு மெய்யப்ப ஞான தேசிக சுவாமிகளுக்கு அவர்தம் கல்விப் பணிகளைப் பாராட்டி கம்பன் கழகம் பணிவுடன் அளிக்கும் காரைக்குடி தெ. இலக்குவன் நினைவைப் போற்றி அவர்தம் குடும்பத்தார் இவ்வாண்டு நிறுவியுள்ள கம்பன் அடிப்பொடி விருதினை வழங்கிப் பாராட்டு – மனிதத் தேனீ இரா. சொக்கலிங்கம்
மாணாக்கர்களுக்கான பரிசளிப்பு- திருமதி வள்ளி முத்தையா
தலைமை உரை- திரு. உ. சகாயம் இ. ஆ. ப. அவர்கள்
____________________________________
22.3.2016 
செவ்வாய்க் கிழமை மாலை 5.00 மணி பூர நாள் நிகழ்ச்சி
____________________________________
தமிழமுதம் – செல்வி எம். கவிதா (தக்க பின்னியங்களுடன் )
கருத்துப்பொழிவு
கம்பனில் மறக்க முடியாதது – திரு. த. இராமலிங்கம்
கம்பனில் மறக்கக் கூடாதது -திரு. பழ. கருப்பையா
கவிப்பொழிவு
பொருள் – தமிழ் வெள்ளம்
தொடக்கப்பொழிவு – நாடாளுமன்ற உறுப்பினர் தகைமிகு கனிமொழி
சொற்கடல் – கவிதாயினி திருமதி ருக்மணி பன்னீர் செல்வம்
சுவை ஊற்று – கவிதாயினி திருமதி சல்மா
____________________________________
23.3.2016 
புதன் கிழமை மாலை 5.00 மணி உத்தரநாள்
____________________________________
தமிழமுதம்- செல்வி எம். கவிதா
பட்டிமண்டபம்
நடுவர்- திரு தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன்.
தலைப்பு – எவர் சந்திப்பில் கம்பன் பெரிதும் வெற்றி கொண்டு
வெளிப்படுகின்றார்?
இராமன் -கைகேயி- திரு. வே. சங்கர நாராயணன்
திருமதி பாரதி பாபு
திரு பாகை கண்ணதாசன்
இராமன் – இராவணன் திரு இரா. மாது
திரு. சுமதிஸ்ரீ
திரு. மெ. ஜெயம்கொண்டான்
இராமன்- சிறைமீண்ட சீதை
திரு. பழ. முத்தப்பன்
திருமதி இரா. கீதா
திரு அப்பச்சி எஸ் சபாபதி
நோக்கர் பெருமகள் நாற்பத்து ஒன்பதின்மர் வாக்களித்து ஒரு அணியை விலக்குதல்
நோக்கர்கள் தீர்ப்பால் பாதிக்கப்பட்டவர் மேல் முறையீடு
நோக்கர்கள் சார்பில் எதிர் வாதம் – திரு. மா. சிதம்பரம்
நடுவர் தீர்ப்பு
____________________________________
24.3.2016 
வியாழக்கிழமை மாலை 5.00 மணி நாட்டரசன் கோட்டை
____________________________________
தலைவர்
நாடாளுமன்ற உறுப்பினர் தகைமிகு டாக்டர் ஈ. எம். சுதர்சன் நாச்சியப்பன்
கம்பன் அருட்கோயில் வழிபாடு
மலர் வணக்கம் திருமதி லெட்சுமி கிருஷ்ணமூர்த்தி
திருமதி ராதா ஜானகிராமன்
கம்பன் அருட்கவி ஐந்து – திருச்சி கலைக்காவிரிக் குழுவினர்
இறைவணக்கம் – செல்வி எம்.கவிதா
வரவேற்புரை – திரு. கண. சுந்தர் உரை
கம்பன் கலை நகைச்சுவை – முனைவர் இளசை சுந்தரம்
நன்றியுரை – முனைவர் மு.பழனியப்பன்
வாழிய செந்தமிழ்
அனைவரும் வருக. அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் வருக.
____________________________________
இவ்வாண்டு நிகழ்ச்சி உதவி
____________________________________
நமது செட்டிநாடு – இதழ்
கோட்டையூர் வள்ளல் அழகப்பர் குடும்ப திருமதி வள்ளி முத்தையா
பொன்னமராவதி அன்னை மெடிக்கல்ஸ்
திரு.அரு. வே. மாணிக்கவேலு, சரஸ்வதி அறக்கட்டளை
நாட்டரசன் கோட்டை திருமதி விசாலாட்சி கண்ணப்பன்
சிங்கப்பூர் தமிழ் அன்பர்
காரைக்குடி தெ. இலக்குவன் நினைவாக இல தெய்வராயன் காந்தி
திரு. கண. சரவணன், ஸ்ரீலெட்சுமி பிரிண்டர்ஸ், காரைக்குடி
விஸ்வாஸ் கலை பண்பாட்டு அறக்கட்டளை மதுரை
ஸ்ரீ விசாலம் சிட் பண்டு
மாணாக்கர்களுக்கான பரிசு
பேராசிரியர் தி. இராச கோபாலன் நிறுவியுள்ள வேம்பு அம்மாள் பரிசு
பேராசிரியர் சரசுவதி இராமநாதன் நிறுவியுள்ள புலவர் க.வே. இராமநாதனார் பரிசு
பேராசிரியர் மு.பழனியப்பன் நிறுவியுள்ள பழ. முத்தப்பனார் பரிசு
பொன்னமராவதி அரு,வெ . மாணிக்கவேலு சரசுவதி பரிசு
திருமதி லெ. அலமேலு நிறுவியுள்ள அரியக்குடி ஆர். எம். வேங்கடாசலம் பரிசு
____________________________________
1
2
3
4
5
6
7
8
____________________________________

Thursday, March 10, 2016

காரைக்குடி கம்பன் திருவிழா 2016

காரைக்குடி கம்பன் திருவிழா 2016

காரைக்குடி கம்பன் கழகத்தின் 2016 ஆம் ஆண்டு கம்பன் திருவிழா காரைக்குடி,
கல்லுக்கட்டி கிருஷ்ணா திருமண மண்டபத்தில்  வரும் 21.3.2016 முதல் 23.3.2016
வரை நடை பெற உள்ளது. 24.03.2016 அன்று கம்பன் அருட்கோயில் (கம்பர் சமாதி)
உள்ள ஊரான நாட்டரசன் கோட்டையில் நடைபெற உள்ளது. அனைவரும் வருக.
அழைப்பிதழ் விபரம் பின்வருமாறு
                  காரைக்குடி கம்பன் கழக நிகழ்ச்சி நிரல் (2016)

21.3.2016 திங்கட்கிழமை   மாலை 5.00 மணி           திருவிழா மங்கலம் 

   தலைவர்- தமிழக அரசு அறிவியல் நகரத் துணைத்தலைவர்
                         திரு. உ. சகாயம் . இ. ஆ.ப. அவர்கள்

இறைவணக்கம்- திருமதி லட்சுமி கிருஷ்ணமூர்த்தி,
 மலர் வணக்கம்  - திருமதி ராதா ஜானகிராமன்

கம்பன் அடிப்பொடி அஞ்சலி - செல்வி எம். கவிதா
கம்பன் அருட்கவி ஐந்து- திருச்சிராப்பள்ளி கலைக்காவிரி நுண்கலைக்
                                                    கல்லூரி மாணவ மாணவியர்

வரவேற்புரை- திரு கம்பன் அடிசூடி

தொடக்கவுரை- பேராசிரியர் தி, மு. அப்துல் காதர்

இசைத்தமிழறிஞர் திரு அரிமளம் சு. பத்மநாபன் எழுதி உமா பதிப்பகம் வெளியிடும்
மீனாட்சி பழனியப்பா அறக்கட்டளைச் சொற்பொழிவு நூல் கம்பனில் இசைத் தமிழ் வெளியீடு -
                          மதுரை தியாகராசர் கல்லூரி செயலர் திரு. ஹரி தியாகராஜன்

பொன்விழா கொண்டாடிய புதுச் சேரி கம்பன் கழகத்தின் செயலாளர்
திரு. வி.பி சிவக்கொழுந்து அவர்களுக்கு கம்ப வள்ளல் விருதி வழங்கிப் பாராட்டு
                        மதுரை கம்பன் கழகத் துணைத்தலைவர் திரு சங்கர சீதாராமன் 

கோவை கம்பன் கழகத் துணைச் செயலாளர் பேராசிரியர் க. முருகேசன் எழுதிய
தெய்வமும் மகனும் நூல் வெளியீடு  -
பேராசிரியர் சொ. சேதுபதி எழுதிய கரைக்குடியில்  ஜீவா என்ற நூல் வெளியீடு

 சென்னை உயர்நீதி மன்ற மூத்த வழக்கறிஞர் திரு. த. இராமலிங்கம்

அந்தமான் தீவில் கம்பன் கழகம் 2016 ஏப்ரலில் கூட்டும் மூன்றாம்
உலகத் தமிழ்க்கருத்தரங்கச் செய்தி விழா மடல் வெளியீடு  -
செட்டிநாடு சிமெண்ட்ஸ் இயக்குநர், நமது செட்டிநாடு இதழ் புரவலர்
திரு இராஜாமணி முத்துக்கணேசன்

கோவிலூர் ஆதீன கர்த்தர் திருப்பெருந்திரு மெய்யப்ப ஞான தேசிக சுவாமிகளுக்கு 
அவர்தம் கல்விப் பணிகளைப் பாராட்டி கம்பன் கழகம் பணிவுடன் அளிக்கும் காரைக்குடி 
தெ. இலக்குவன் நினைவைப் போற்றி அவர்தம் குடும்பத்தார் இவ்வாண்டு நிறுவியுள்ள
கம்பன் அடிப்பொடி விருதினை வழங்கிப் பாராட்டு - மனிதத் தேனீ  இரா. சொக்கலிங்கம் 

மாணக்கர்களுக்கான பரிசளிப்பு- திருமதி வள்ளி முத்தையா

தலைமை உரை- திரு. உ. சகாயம் இ. ஆ. ப. அவர்கள் 

--------------------------------------------------------------------------------------------------------------------------


22.3.2016 செவ்வாய்க் கிழமை   மாலை 5.00 மணி           பூர நாள் நிகழ்ச்சி
தமிழமுதம் - செல்வி எம். கவிதா (தக்க பின்னியங்களுடன் )

                                                            கருத்துப்பொழிவு                                                              


கம்பனில் மறக்க முடியாதது - திரு. த. இராமலிங்கம்
கம்பனில் மறக்கக் கூடாதது -திரு. பழ. கருப்பையா


                                                                     கவிப்பொழிவு                                                           

                                        பொருள் - தமிழ் வெள்ளம்

தொடக்கப்பொழிவு - நாடாளுமன்ற உறுப்பினர் தகைமிகு  கனிமொழி
சொற்கடல் - கவிதாயினி திருமதி ருக்மணி பன்னீர் செல்வம்
சுவை ஊற்று - கவிதாயினி திருமதி சல்மா

--------------------------------------------------------------------------------------------------------------------------


23.3.2016 புதன் கிழமை   மாலை 5.00 மணி           உத்தரநாள்
தமிழமுதம்- செல்வி எம். கவிதா

                                               பட்டிமண்டபம்

நடுவர்- திரு தமிழ்க்கடல் நெல்லைக்கண்ணன்

                தலைப்பு - எவர் சந்திப்பில் கம்பன் பெரிதும் வெற்றி கொண்டு
                                       வெளிப்படுகின்றார்?

இராமன் -கைகேயி-                திரு. வே. சங்கர நாராயணன்
                                                           திருமதி பாரதி பாபு 
                                                            திரு பாகை கண்ணதாசன்

இராமன் - இராவணன்            திரு இரா. மாது
                                                              திரு. சுமதிஸ்ரீ
                                                               திரு. மெ. ஜெயம்கொண்டான்
இராமன்- சிறைமீண்ட சீதை  திரு. பழ. முத்தப்பன்
                                                                திருமதி இரா. கீதா
                                                                திரு அப்பச்சி எஸ் சபாபதி


நோக்கர் பெருமகள்ள நாற்பத்து ஒன்பதின்மர் வாக்களித்து ஒரு அணியை விலக்குதல்

நோக்கர்கள் தீர்ப்பால் பாதிக்கப்பட்டவர் மேல் முறையீடு
நோக்கர்கள் சார்பில் எதிர் வாதம் - திரு. மா. சிதம்பரம்
நடுவர் தீர்ப்பு
  24.3.2016 வியாழக்கிழமை  மாலை 5.00 மணி          நாட்டரசன் கோட்டை
தலைவர்  
நாடாளுமன்ற உறுப்பினர் தகைமிகு டாக்டர் ஈ. எம். சுதர்சன் நாச்சியப்பன்

கம்பன் அருட்கோயில் வழிபாடு

மலர் வணக்கம்   திருமதி லெட்சமி கிருஷ்ணமூர்த்தி
                                        திருமதி ராதா ஜானகிராமன்

கம்பன் அருட்கவி ஐந்து - திருச்சி கலைக்காவிரிக் குழுவினர்

இறைவணக்கம் - செல்வி எம்.கவிதா

வரவேற்புரை - திரு. கண. சுந்தர் 

தலைவர் உரை

கம்பன் கலை நகைச்சுவை  - முனைவர் இளசை சுந்தரம்

நன்றியுரை - முனைவர் மு.பழனியப்பன்

வாழிய செந்தமிழ்  

அனைவரும் வருக.   அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் வருக. 

----------------------------------------------------------

இவ்வாண்டு நிகழ்ச்சி உதவி

நமது செட்டிநாடு - இதழ்
கோட்டையூர் வள்ளல் அழகப்பர் குடும்ப திருமதி வள்ளி முத்தையா
பொன்னமராவதி அன்னை மெடிக்கல்ஸ்
திரு.அரு. வே. மாணிக்கவேலு, சரஸ்வதி அறக்கட்டளை
நாட்டரசன் கோட்டை திருமதி விசாலாட்சி கண்ணப்பன்
சிங்கப்பூர் தமிழ் அன்பர்
காரைக்குடி தெ. இலக்குவன் நினைவாக இல தெய்வராயன் காந்தி
திரு. கண. சரவணன், ஸ்ரீலெட்சுமி பிரிண்டர்ஸ், காரைக்குடி
விஸ்வாஸ் கலை பண்பாட்டு அறக்கட்டளை மதுரை
 ஸ்ரீ விசாலம் சிட் பண்டு

மாணக்கர்களுக்கான பரிசு
பேராசிரியர் தி. இராச கோபலன் நிறுவியுள்ள வேம்பு அம்மாள் பரிசு
பேராசிரியர் சரசுவதி இராமநாதன் நிறுவியுள்ள புலவர் க.வே. இராமநாதனார் பரிசு
பேராசிரியர் மு.பழனியப்பன் நிறுவியுள்ள பழ. முத்தப்பனார் பரிசு
பொன்னமராவதி அரு,வெ . மாணிக்கவேலு சரசுவதி பரிசு
திருமதி லெ. அலமேலு நிறுவியுள்ள அரியக்குடி ஆர். எம். வெங்கடாசலம் பரிசு 











Sunday, March 6, 2016

கம்பன் நின்று நிலைப்பது அழகியல் பாடல்களிலா, அறவியல் பாடல்களிலா .



”ராமன் நான்கு கொலைகள் செய்திருக்கிறான். ஆனால் ராவணன் உயிர்க்கொலை செய்ததே இல்லை. “ என்று கம்பராமாயணப் பேச்சின் ஊடே ஒரு எதிர்பாரா செய்தியை கம்பனின் கோட்டையான காரைக்குடியில் கம்பன் கழகத்தில் நடைபெற்ற இசைப் பட்டிமண்டபத்தில் வழங்கிவிட்டுத் தப்பிச் சென்றிருக்கிறார் நண்பர் வளரும் கவிதை முத்து நிலவன் அவர்கள். !!!



விஷயம் இதுதான். மார்ச் மாத கம்பர் விழா - 5- 3- 2016. அன்று காரைக்குடி கிருஷ்ணா மண்டபத்தில் நடைபெற்றது. அதில் நண்பர் பதிவர் புதுக்கோட்டை முத்துநிலவன் தலைமையில் நடைபெற்ற இசைப் பட்டிமண்டபத்தில் கம்பன் நின்று நிலைப்பது அழகியல் பாடல்களிலே என்று மகா சுந்தர் அவர்களும், அறவியல் பாடல்களிலே என்று முனைவர் மு.பாலசுப்ரமணியன் அவர்களும் வாதாடினார்கள்.




மிக சுவாரசியமான இவ்விழாவுக்கு மகா சுந்தர் பேசி முடிக்கும்போதுதான் செல்ல இயன்றது. அடுத்து முத்துநிலவன் அவர்கள் செறிவார்ந்த உரையையும் மு பாலசுப்ரமணியன் அவர்களின் உரையையும் , கம்பன் அடி சூடி அவர்களின் நெகிழந்த உரையையும் கேட்கும் பாக்கியம் பெற்றேன். 




முனைவர் பாலசுப்ரமணியன், அறவியல் என்று சகோதரத்துவம், ( நானிலம் சார்ந்த சகோதரர்கள் - குகன், சுக்ரீவன், வீபீடணன், ) பற்றியும், சீதையின் கற்பின் அறம் பற்றியும் கூறினார். இராமனின் கற்பின் பெருமை பற்றியும் “ இரு மாதரைச் சிந்தையாலும் தீண்டேன் ” என்ற எண்ணம் பற்றியும் கூறினார். அழகியல் மட்டுமல்ல அனைத்தையும் பாடியிருக்கும் கம்பனின் அறத்தைப் புகழ்ந்தார். 




முத்துநிலவன் பேச்சு மிக அருமையாக இருந்தது.  மனைவியைக் கவர்ந்து சென்ற எதிரிக்கும் இரங்கும் மனநிலையில் இராமன் இராவணனிடம் , இன்று போய் நாளை வா என்று உரைத்த அறத்தையும், தசரதனிடம் கைகேயியும் பரதனும் அடுத்த ஜென்மத்திலும் தாயும் தனயனுமாகக் கிடைக்கும் பாக்கியம் அருளும் வரம் வேண்டிய இராமனின் அறம் பற்றியும் சிலாகித்துக் கூறினார். 


மேலும் கம்பனின் சொல்சித்திரத்தைப் புகழ்ந்து அவர் வார்த்தைகளை அடுக்கும் வித்தை பற்றிச் சிறப்பித்துக் கூறினார். நான் ரசித்த இடம் இதுதான். 


சீதையைப் பார்த்துத் திரும்பியதும் இராமனிடம் கண்டேன் கற்பின் கனலியைக் கண்களால். என்று கூறிய இடத்தில் கம்பன் வார்த்தைகளை அடுக்கிய விதத்தைச் சிறப்பித்துப் பொருள் கூறினார். ஒருவரைத் தேடிச் சென்று திரும்பும்போது முதலில் கேட்கப்படும் கேள்வி பார்த்தியா. பார்த்தேன். யாரைப் பார்த்தான் கற்பின் கனலியைப் பார்த்தேன். (கற்பின் கனலி என்றால் அது சீதை மட்டுமே. ). நீ பார்த்தியா இல்ல வேற யாரும் பார்த்தாங்களா. - கண்களால். எனது கண்களால் பார்த்தேன். என்று அவர் கூறியபோது மிக அருமையாக இருந்தது. 


மக்களை உயிராகவும் மன்னனை உடலாகவும் , உடல் மாறலாம் உயிர் மாறாது என்றும் மக்களுக்காகவே அரசாண்ட இராமனின் அறம் பற்றியும் சிறப்பித்துச் சொன்னார்.  


அழகியல் இருந்தாலும் அறவியல் சார்ந்தே தீர்ப்பளித்தார் நடுவர். அப்போதுதான் வான்மீகியில் இல்லாததைக் கம்பன் எப்படி மாற்றி அமைத்திருக்கிறார் என்றும் குறிப்பிட்டார். அங்கே இராவணன் சீதையைக் கவர்ந்து சென்றதையும் தமிழகத்துக்கு ஏற்றமாதிரி கம்பராமாயணத்தில் அப்படியே பூமியோடு பேர்த்துச் சென்றதையும் குறிப்பிட்டார். அப்போதுதான் இராமன் கொலை செய்தான் என்றும் இராவணன் கொலை செய்ததே இல்லை என்றும் குறிப்பிட்டார். இராவணனின் ராஜ்ஜியத்திலும் மக்கள் சந்தோஷமாக வாழ்ந்தார்கள் என்றும். அறம் பற்றிய மதிப்பீடு வரும்போது மட்டுமே இராமன் ஏகபத்தினி விரதனாக இருந்ததையும் அதே சமயம் எவ்வளவோ பெருமைகள் இருந்தும் பிறன்மனை நோக்கியதால் சீர்கெட்டழிந்த இராவணனின் நிலை பற்றியும் செம்மையாக மனதில் பதியும் வண்ணம் உரைத்தார். 


சிலர் கவிதைகள் எழுதுவார்கள். சில கவிஞர்கள் தங்கள் எழுத்துக்களால் இன்னும் சில கவிஞர்களை உருவாக்குவார்கள். ஆனால் மகா கவிஞனோ காலத்தை எழுதுவான் அப்படிப்பட்ட கவிஞர்களுள் ஒருவர் கம்பர். ( ஏனையோர் வள்ளுவன், பாரதி  எனக் குறிப்பிட்டார் ).  இன்றைக்கும் காலம் கடந்தும் வாசிக்கப்படும் நேசிக்கப்படும் ஒன்றாக கம்பரசம் இருப்பதைக் குறிப்பிட்டார். 


அறவியல் பற்றிய தனது தீர்ப்பே இறுதியானது அல்ல என்றும் இன்னும் இதுபற்றிய விவாதங்களை முன்னெடுக்கலாம் என்றும் குறிப்பிட்டது அவரது முதிர்ச்சியையும் எதிர்க்கருத்துக்களை எதிர்கொள்ளும் பெருந்தன்மையையும் காட்டியது.   


கம்பன் கழகம் சார்பாக போட்டிகள் நடத்தப் பெற்று மாணாக்கருக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன. 



கம்பனடிசூடி பழ பழ அவர்களின் உரை நெகிழ்வாக இருந்தது. ஏப்ரல் மாதம் அந்தமானில் கம்பன் கழகம் சார்பாக நடைபெறப்போகும் மூன்றாம் உலகத் தமிழ்க் கருத்தரங்கம் பற்றிக் கூறினார். அங்கே கம்பராமாயணத்தில் வெவ்வேறு தலைப்புகளில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட இருக்கின்றன.


காரைக்குடியில் வரும் மார்ச் 21, 22, 23, ஆகிய தேதிகளில் கம்பர் விழா நடைபெறப் போவது குறித்துக் கூறினார்கள். அதில் சிறப்பம்சங்களாக கோயிலூர் ஆதீனகர்த்தா திருப்பெருந்திரு. மெய்யப்ப ஞான தேசிக சுவாமிகளுக்கு அவர்தம் தமிழ், ஆன்மீகம், கல்விப் பணிகளைப் பாராட்டி தெ இலக்குவன் இல்லத்தார் நிறுவி இவ்வருடம் வழங்க உள்ள கம்பனடிப்பொடி விருது பற்றிக் கூறினார்.  மதுரை கம்பன் கழகத் துணைத்தலைவர் திரு சங்கர சீதாராமன் அவர்கள் வழங்க புதுச்சேரி கம்பன் கழகத் தலைவர் திரு வி பி சிவக்கொழுந்து அவர்களுக்குக் கம்பவள்ளல் விருது வழங்கப்படப் போவதாகக் குறிப்பிடார். 


பேராசிரியர் சொ. சேதுபதி அவர்கள் ஜீவாவைப் பற்றி எழுதிவரும் ”காரைக்குடியில் ஜீவா “ நூல் வெளியிடப்படும் என்று கூறினார். கலெக்டர் சகாயம், நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சுதர்சன நாச்சியப்பன்,பழ. கருப்பையா, கவிதாயினி சல்மா, ருக்மணி பன்னீர்செல்வம்,நெல்லை கண்ணன், சுமதி ஸ்ரீ, பழ முத்தப்பன், ஆகியோர் &  இன்னும் பலர் பங்கேற்றுச் சிறப்பிக்கிறார்கள். 




முத்து பழனியப்பன் அவர்களின் நன்றியுரையோடு விழா இனிது நிறைவுற்றது.  


விழாவின் முடிவில் நண்பர் முத்துநிலவனை கம்பன் அடி சூடி அறிமுகத்தோடு சந்தித்து எனது நூல்களை வழங்கி அவரது கம்பன் தமிழும் கணினித் தமிழும் என்ற நூலை ( நூலுக்கு நூல் என்றபடி - எனது நாலு நூலுக்கு ஒரு நூல் . ( அவ்ளோ சின்னம் எனது புத்தகங்கள் :) :)  ) பெற்றுக் கொண்டு வந்தேன். அப்போது கம்பன் அடி சூடியிடம் இவர் நம்ம ஊருக்கு வந்து கம்பன் கழகத்தில் இராமனைப் பற்றிக் குறைகூறிவிட்டுப் போறாரே என்றேன் சிரித்தபடி. அதற்கு கம்பன் அடிசூடி அவர்கள் மந்தகாசமாகப் புன்னகைத்தபடி ”இவர் வெகுநாள் முன்பே கம்பனையும் கார்ல்மார்க்ஸையும் கம்பேர் பண்ணி புக்கே போட்டுருக்கார்.” என்று  சொல்லி அதிர வைத்தார். :) சரி படித்துப் பார்ப்போம் என்று நினைத்திருக்கிறேன். :)  


கம்பரசம் பருக வருக. 

கம்பன் புகழ் வாழ்க.

கன்னித் தமிழ் வாழ்க.


நன்றி- தேனம்மை லஷ்மணன், வலைப்பூ - சும்மாகம்பன் நின்று நிலைப்பது அழகியல் பாடல்களிலா, அறவியல் பாடல்களிலா .



.













நன்றி- தேனம்மை லஷ்மணன், வலைப்பூ - சும்மா