Tuesday, December 29, 2015

2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதக் கூட்ட அழைப்பிதழ்

கம்பன் கழகத்தின் 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதக் கூட்டம் எதிர்வரும்  ஜனவரி மாதம் ஒன்பதாம் தேதி நடைபெற உள்ளது, 


அன்புடையீர்
வணக்கம்
கம்பன் புகழ் பாடிக் கன்னித் தமிழ் வளர்க்கும் கம்பன் திருவிழாவிற்கு பல்லாண்டுகளாகப் பெருங்கொடையளித்துப் புரவலராய் விளங்கிய பெருந்தகை, தொழிலதிபர் செட்டிநாட்டசர் டாக்டர் எம்.ஏ. எம் இராமசாமி அவர்களுக்கு நன்றி பாராட்டிப் புகழாரம் சூட்டும் முகமாக புத்தாண்டில் முதற் சிறப்புக் கூட்டம் 9-1-2016 ஆம் நாள் சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு கல்லுக்கட்டி மேற்கு கிருஷ்ணன் கோயிலை அடுத்துள்ள கிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் நடைபெறஉள்ளது, அவ்வமயம் அவர்களைப் பற்றி திரைப்பட இயக்குநரும் எழுத்தாளரும் ஆன கவிஞர் காரைக்குடி நாராயணன் ஆக்கிய டாக்டர் எம், ஏ.எம் ஒரு சகாப்தம் என்ற நூல் வெளியீடும் அவர்தம் திருவுருவப் படத்திறப்பும் நிகழ்கிறது. அன்பர்கள் யாவரும் கலந்துகொண்டு கன்னித் தமிழ் அமுதம் பருகி மகிழ்வித்திட வருக வருக. 

அன்பும் பணிவுமுள்ள
கம்பன் கழகத்தார்








No comments :

Post a Comment