Sunday, August 23, 2020

ஆழ்ந்த இரங்கல்

 

இராஜபாளையம் கம்பன் கழகத்தின் செயலராக விளங்கி கம்பன் புகழ் பாடிக் கன்னித்தமி்ழ் வளர்த்த  திரு என்.எஸ். முத்துக்கிருஷ்ணராஜா அவர்கள்  நேற்று  (23.8.2020 ) இறைநீழல் அடைந்தார் என்ற செய்தி அறிந்து வருத்துகிறோம். அவரைப் பிரிந்து வாடும் அன்னாரின் குடும்பத்தாருக்குக் காரைக்குடி கம்பன் கழகம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது. 

    திரு. என். எஸ். முத்துக் கிருஷ்ண ராஜா அவர்கள் தொடர்ந்து அயராமல் கம்பன் கழகத்தின் பணிகளை ஆற்றிவந்தவர். மேலும் இராஜபாளையத்தில் கம்பன் கழகம் சிறப்புடன் நடக்கவும், சிறந்த ஒரு நூலகம் ஒன்றை அமைத்தும்  தமிழ் வளர்த்த அன்பர்.

    காரைக்குடி கம்பன் கழகம் இணைய வழியில் கம்பராமாயணக் காணொளிக் காட்சித் தொடர் உரை நடத்துவதை அறிந்துத் தானாகவே வாழ்த்துகளைத்தெரிவித்தவர். மேலும் இணையக் குழுவில் அவராக இணைந்து நாள்தோறும் கம்பன் தமிழைப் பருகியவர். இராஜபாளையம் கம்பன் கழக அன்பர்களையும் இணைய நிகழ்வில் கலந்து கொள்ளச் செய்து ஊக்கம் அளித்தவர். 

    காரைக்குடி, கம்பன்கழகத்துடன் இணைந்து  பணி செய்த அவரின் பெருந்தொண்டு என்றைக்கும் நினைவு கூரத்தக்கது. அவரின் ஆன்மா இறை நிழலில் சாந்தி அடைய பிரார்த்திக்கிறோம்

கம்பன் கழகத்தார் 

காரைக்குடி     

No comments :

Post a Comment