Thursday, January 26, 2023

அனைத்து கல்லூரி மாணவ மாணவியருக்கான போட்டிகள் 2023



தமிழக அனைத்துக் கலை, அறிவியல், பொறியியல், தொழில் நுட்ப, கல்வியியல் கல்லூரி மாணாக்கர்களுக்கான பேச்சுப் போட்டி -2023

வணக்கம்.  காரைக்குடியில் கம்பன் புகழ்பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும் நாங்கள், இளைய தலைமுறையினரின் இலக்கிய உணர்வுகளை வளர்க்கும்முகமாக கல்லூரி தமிழக அளவிலான கல்லூரி மாணாக்க மாணாக்கியருக்காக பேச்சுப் போட்டியினை வருகிற 26.2.2023 ஞாயிற்றுக்கிழமை  அன்று பிற்பகல் 2.00 மணிக்கு காரைக்குடி, ஸ்ரீ மீனாட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடத்துகிறோம். இந்த ஆண்டும் தங்கள் கல்லூரியில் இருந்து மாணாக்கர்களை அனுப்பிப் பயன்பெறச் செய்திடப் பணிவன்புடன் வேண்டுகிறோம். போட்டியில் கலந்துகொள்வோர் பெயர்ப்பட்டியலை 20.2.2023 அன்றுக்குள்  எமது அஞ்சலக முவரிக்கோ,  kambantamilcentre@gmail.com என்ற மின்னஞ்சல் முவரிக்கோ அனுப்பி உதவ வேண்டுகிறோம். போட்டிக்கான விதிமுறைகள் பின்வருமாறு.

·         கல்லூரி முதல்வர்கள் தங்கள் கல்லூரியில் இருந்து  கலந்து கொள்ளும் மாணாக்கர்களைத் தக்க சான்றிதழுடன் அனுப்பிட வேண்டுகிறோம்.

·         போட்டியில் முதலிடம் பெறுபவர்க்கு கம்பன் திருவிழாவில் உரையாற்ற வாய்ப்பு வழங்கப்பெறும்

·         போட்டிகான மூன்று தலைப்புகளில் ஒன்று போட்டி ஆரம்பிப்பதற்கு அரைமணி நேரம் முன்னதாக அறிவிக்கப்பெறும்.

·         போட்டிக்கு வந்து செல்வதற்குப் போக்குவரத்துச் செலவு வழங்குவதற்கில்லை

·         பரிசு பெற்றோர் கம்பன் திருவிழாவின் முதல்நாள் அன்று நேரில் பரிசினைப் பெற்றுச் செல்ல வேண்டுகிறோம்.

காரைக்குடி                                                                                                    இங்ஙனம்

26.1.2023                                                                                                      கம்பன் கழத்தார்

----------------------------------------------------------------------------------------------------------

போட்டி நாளும் நேரமும் :     26.2.2023 ஞாயிற்றுக் கிழமை. பிற்பகல் 2.00 மணி முதல்

 இடம்                                :     ஸ்ரீ மீனாட்சி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, காரைக்குடி

தலைப்பு                            : 1. கம்பன் கண்ட நட்பு,  

   2. கம்பன் கண்ட அன்பு

                                                   3. கம்பன் கண்ட  அறிவு                     

பரிசு விபரம்                     :    முதற்பரிசு , இரண்டாம் பரிசு,   மூன்றாம் பரிசு மற்றும் ஊக்கப்  பரிசுகள், மேலும்  கலந்து கொண்டோருக்குப் பங்கேற்புச் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

போட்டியின் ஒருங்கிணைப்பாளர்கள்- முனைவர் இரா. கீதா (6381315244),

முனைவர்  சொ. அருணன் (7904282698) முனைவர் . ஸ்டீபன் மிக்கேல் ராஜ் (9842589571) முனைவர் குபேந்திரன் (9976584787)


No comments :

Post a Comment