Saturday, January 28, 2017

கம்பன் கழக இலக்கியப் போட்டிகள் 2017 முடிவுகள்.


காரைக்குடி கம்பன் கழகம் நடத்திய இலக்கியப்  போட்டி முடிவுகள்
கம்பன் புகழ்பாடிக் கன்னித்தமிழ் வளர்க்கும் காரைக்குடி கம்பன் கழகத்தின் இலக்கியப் போட்டிகள் இன்று (28.1.2017) காலை முதல் கிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் நடைபெற்றன. இப்போட்டிகளில்  நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர் கலந்து கொண்டனர். மாநிலம் தழுவிய அளவில் மாணவ மாணவிகள் வருகை தந்து போட்டிகளில் கலந்து கொண்டது சிறப்பிற்குரியதாக அமைந்தது.
  6, 7, 8 ஆகிய வகுப்பு மாணவ மாணவியருக்காக நடத்தப்பெற்ற கம்பராமாயண மனனப் போட்டியின் முதற்பரிசிற்கு முத்துப்பட்டிணம் வித்யாகிரி மெட்ரிக் பள்ளி மாணவி செல்வி. ச. சுபலெட்சுமி  தகுதி பெற்றுள்ளார். இப்பிரிவில் வீரசேகரபுரம் வித்யாகிரி மெட்ரிக் பள்ளி மாணவி செ. கார்த்திகாதேவி, புதுவயல் வித்யாகிரி மெட்ரிக் பள்ளி மாணவி இரா. கார்குழலி, தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் பள்ளி மாணவி க. ராஜி, லீடர் மெட்ரிக் பள்ளி மாணவி எம்.சுமித்ராதேவி, காரைக்குடி வித்யாகிரி மெட்ரிக் பள்ளி மாணவன் மு. நாராயண கோவிந்தன், தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம்பள்ளி மாணவர் அ. கார்த்திகேயன் ஆகியோர் ஊக்கப்பரிசுகளைப் பெறத் தகுதி பெற்றுள்ளனர்.
     9,10,11, 12 ஆகிய வகுப்பு மாணவ மாணவிகளுக்கு இடையே நிகழ்ந்த, கம்பராமாயணய மனனப் போட்டியில் முதற்பரிசினைப் பெற புதுவயல் வித்யாகிரி மெட்ரிக்பள்ளி மாணவி அரு. அழகம்மை தகுதி பெற்றுள்ளார். மேலும் முத்துப்பட்டணம் வித்யாகிரி மெட்ரிக் பள்ளி மாணவி டே.ஸ்டேனிஸ் செரின், காரைக்குடி அழகப்பா மெட்ரிக் பள்ளி மாணவி கே. ஸ்நேகா ஆகியோர் ஊக்கப்பரிசுகளைப் பெறத் தகுதி பெற்றுள்ளனர்.
     கல்லூரி அளவில் நடைபெற்ற கம்பராமாயணப் பேச்சுப்போட்டியில் முதற்பரிசினைப் பெற பொள்ளாச்சி எம்.ஜி.எம் கல்லூரி மாணவர் சு. சதீஸ்குமார்  தகுதி பெற்றுள்ளார். இரண்டாம் பரிசினைப் பெற தேவகோட்டை ஸ்ரீசேவுகன் அண்ணாமலை கல்லூரியின் மாணவர் வி. யோகேஷ்குமாரும், கோபிச் செட்டிப்பாளையம், பி,கே. ஆர்  மகளிர் கல்லூரி மாணவி நா. ஹேமலதா, திருவாருர் மத்தியப் பல்கலைக்கழக மாணவர் க. தமிழ்பாரதன் ஆகியோர் ஊக்கப் பரிசுகளைப் பெறவும், ஆறுதல் பரிசுகளைப் பெற அமராவதிப் புதூர் ஸ்ரீ சாரதா நிகேதன் கல்லூரி மாணவி இரா. நாச்சாள், காரைக்குடி டாக்டர் உமையாள் இராமநாதன் கல்லூரி மாணவி அ. தீன்ஷாநூப் ஆகியோரும் தகுதி பெற்றுள்ளனர்.
     கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு இடையே நடைபெற்ற திருக்குறள் பேச்சுப்போட்டியில் முதற்பரிசினைப் பெற பொள்ளாச்சி எம். ஜி.எம் கல்லூரி மாணவர் சு. சதீஷ்குமார் தகுதி பெற்றுள்ளார். இரண்டாம் பரிசினைப் பெற திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழக மாணவர் த.க.தமிழ்பரதன் என்பவரும், ஊக்கப்பரிசுகளைப் பெற கோபிச் செட்டிப் பாளையம், பி.கே. ஆர் மகளிர் கலைக்கல்லூரி மாணவி நா. ஹேமலதா, சோழவந்தான் விவேகானந்தா கல்லூரி பெ. பிரதீப் ஆகியோரும் தகுதி பெற்றுள்ளனர்.
     இப்போட்டிகளின் நடுவர்களாக  திருமதி கண்ணம்மை, திரு உ. கரிகாலன், திரு. ஞா. சிங்கமுத்து, திருமதி தொண்டியம்மாள், திரு. திருநாவுக்கரசு, கவிஞர் நாராயணன், பேராசிரியர் சு.இராஜாராம், பேரா. நா.கார்வண்ணன், திரு.அரு.இராமநாதன், பேராசிரியர். சே. செந்தமிழ்ப்பாவை, பேராசிரியர் மா. சிதம்பரம், பேராசிரியர் பா. தட்சிணாமூர்த்தி ஆகியோர் அமைந்து இப்போட்டிகளை நடத்தித் தந்தனர்.
     திரு. அரு,வே. மாணிக்கவேலு, திரு. மீ.சுப்பிரமணியம், கரு. மணிகண்டன், பேராசிரியர் கீதா, பேராசிரியர் மு.பழனியப்பன், கம்பன் அடிசூடி பழ. பழனியப்பன், திருமதி தெய்வானை பழனியப்பன் ஆகியோர் போட்டிகள் நடத்த ஏற்பாடு செய்திருந்தனர்.
     போட்டிகளுக்கு வருகை தந்த மாணவ மாணவியருக்கும், வழி நடத்திய முதல்வர்களுக்கும், தயாரிப்பு நல்கிய ஆசிரிய ஆசிரியைகளுக்கும் காரைக்குடி கம்பன் கழகம் நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறது.

     போட்டிகளில் வென்றவர்களுக்குக் காரைக்குடி கம்பன் கழகம் ஏப்ரல் ஏழாம் தேதி நடத்தும் ஆண்டுவிழாவில் பரிசுகள் வழங்கப்பெற உள்ளன என்று காரைக்குடி கம்பன் கழகச் செயலர் பழ. பழனியப்பன் அவர்கள் தெரிவித்துள்ளார்.  






No comments :

Post a Comment