Saturday, July 4, 2015

கம்பன் கழகம், காரைக்குடி, சூலை மாதக் கூட்டம்,

நேற்று காரைக்குடி கம்பன் கழகத்தின் சார்பில் மாதக் கூட்டம், கிருஷ்ணன் கோவில் அருகில் உள்ள கிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் மாலை ஆறுமணிக்கு நிகழ்ந்தது. கம்பன் கழகம் காரைக்குடி என்ற பெயரில் கம்பன் கழகம் பதியப் பெற்றுள்ளது. இதுவரை பதிவு பெறாத அமைப்பாக விளங்கிய இவ்வமைப்பு தற்போது பதிவு செய்யப்பெற்றுள்ளது.
இட நெருக்கடி, மன நெருக்கடி காரணமாக கம்பன் மணிமண்டபத்தில் இந்நிகழ்வு நடைபெற இயலாமால் போனது. இருப்பினும் திரளாக மக்கள் வருகை தந்து கம்பனின் அறிவியல், கம்பனில் அழகியல் ஆகிய தலைப்புகளில் நிகழ்ந்த உரைகளைக் கேட்டு மகிழ்ந்தனர்.

No comments :

Post a Comment